ஆலமரத்தின் மருத்துவ குணம்

 ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல அரைத்து கொட்டைப் பாக்களவு மருந்தை, அரை டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி குடித்து விட வேண்டும். இவ்வாறு காலை, மாலையாக மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், (வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றில் இரைச்சல், சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு) வயிற்றுக் கோளாறு யாவும் குணமாகும்.

ஆலமரத்திலுள்ள இளந்தளிர்களைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து அரைத்து, கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி நின்றுவிடும்.

ஆலமரத்தின் பழங்களைக் கொண்டுவந்து சுத்தம் செய்து அம்மியில் மைபோல அரைத்து கொட்டைபாக்களவு மருந்தை ஒரு டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, இரவு படுக்கும் முன் குடித்துவிட்டுப் படுத்தால் மறுநாள் காலையில் மலச்சிக்கல் சரியாகி விடும்.

ஆலமரத்தின் பழத்தைக் கொண்டுவந்து அதே அளவு ஆலவிழுதின் நுனியிலுள்ள பகுதியையும் சேரத்து மைபோல அரைத்து, கொட்டைபாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது படிப்படியா இறுகும். உடல் பலப்படும். இடையில் நிறுத்தி விட்டால் எந்த விதமான பலனையும் காண முடியாது.
ஆண் மலடு, பெண் மலடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட ஆணும், பெண்ணும் இதே மாதிரித் தொடர்ந்து சாப்பிட்டு உடல் உறவு கொண்டால் நிச்சயமாகக் கரு உற்பத்தியாகும். மருந்து சாப்பிடும் 40 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக்கூடாது.

ஆலமரத்தின் அடிபாகத்திலுள்ள சுரசுரப்பான பாகத்தை வெட்டுக் கத்தியினால் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளேயிருக்கும் பட்டையைத் தேவையான அளவு வெட்டிக் கொண்டு வர வேண்டும். இதேபோல ஆழ மரத்தின் வேர்ப்பட்டையையும் வெட்டிக் கொண்டு வரவேண்டும். வகைக்கு 1௦௦ கிராம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு புதிய மண்கலத்தில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை விட்டு நன்றாகக் கலக்கி மூடி ஓர் இடத்தில பாதுகாப்பாக வைத்து விட வேண்டும், மறுநாள் காலையில் இந்த நீரை மட்டும் இறுத்தி வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். உடனே ஒரு டம்ளர் அளவு தண்ணீரை மருந்தில் விட்டு மூடி பழைய இடத்தில வைத்துவிட வேண்டும். இதேபோல மூன்று நாட்களுக்கு ஒரு முறை, பட்டை மாற்றித் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.
சிலருக்கு 40 நாட்களில் பாதியளவு சர்க்கரையே குறைந்திருக்கும். மேலும் பாதியளவு குறைய மேலும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு அறவே குணமாகும். இது ஒரு கைகண்ட மருந்தாகும். மூன்று நாட்களுக்கு மேல் கண்டிப்பாக பட்டையை மாற்றி விட வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...