ஊழல் கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும், ஒரு வாய்ப்பு தாருங்கள் முன்னேற்றப்பாதையை தருகிறோம்

 தமிழகத்தில் ஊழல் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. வரும் மே 16-ம் தேதி நடை பெற உள்ள தேர்தலில், நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் முதல்வரை தேர்வுசெய்வதற்கானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக, திமுக என மாறிமாறி இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தும எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிமுக அரசு தற்போது ஊழலின் உச்ச கட்டத்துக்கு சென்று விட்டது. ஊழல் செய்யும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கான பணிகளுக்கு முறைப்படி டெண்டர் வழங்கு வதில்லை. யார் அதிகமாக லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக- காங்கிரஸ் கூட்டணியும் ஊழல் கூட்டணி.

இந்தியாவில், 14 மாநிலங்களில் பாஜக ஆட்சிசெய்கிறது. இது தவிர மத்தியில் 2 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. ஆனால், இதுவரை யார்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. கிராமங்கள், ஏழை எளியமக்களின் முன்னேற்றங்களுக்கான திட்டங்களை முழுவீச்சில் செயல் படுத்தி வருகிறது. ஆனால், இந்த திட்டங்களைக் கூட தமிழகத்தின் கடைக்கோடி மக்களிடம் கொண்டுசெல்ல அதிமுக அரசு தடையாக உள்ளது. இதேபோல எல்இடி விளக்குகளுக்கான உதய்திட்டம், காப்பீட்டு திட்டம் போன்றவையும் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் முடங்கி கிடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறது. அதற்கேற்ற மாநில அரசு தற்போது தேவைப் படுகிறது.

ஒரு கிலோ அரிசிக்கு மத்திய அரசு ரூ.28 மானியம் தருகிறது. மாநில அரசு ரூ.1 கொடுத்து அம்மா அரிசி என கூறுகிறது. தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது மத்திய அரசு ரூ.2000 கோடியை அளித்தது. அந்தபணத்தை இங்கு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரமாக பிரித்து கொடுத்து அம்மாவின் பரிசு என்றார்கள். அதேபோல, நாடுமுழுவதும் பெட்ரோல், டீசலில் எத்தனால் கலந்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கரும்பு உற்பத்தி யாளர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் எத்தனால் உற்பத்திக்கு அதிமுக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், இதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய சாராயத்துக்கு தாராளமாக அனுமதி அளிக்கிறது.

அதிமுக, திமுக என இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்தது போதும். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்துங்கள். நாங்கள் தமிழகத்தை முன்னேற்றப் பாதை யில் அழைத்துச் செல்கிறோம்.

திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியது 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...