வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை போன்ற வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதிவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தில்லியில் மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் செய்தியா ளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பயங்கரவாத தாக்குதல்கள், மதக் கலவரத்தில் உயிரிழக்கும் அப்பாவிமக்களுக்கு உதவிசெய்யும் திட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அமல்படுத்தப் பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை, பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழப் போர் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேற்கண்ட ரூ.3 லட்சம் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார். எனவே, நாட்டின் எந்தப்பகுதியிலும் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதலிலோ, மாவோயிஸ்ட் வன்முறையிலோ, எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடித் தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் பலியாகும் அப்பாவிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இந்தநிதியானது, உயிரிழப்பவரின் நெருங்கிய உறவினருக்கு அளிக்கப்படும்.

இதேபோல், தாக்குதலில் 50 சதவீதத்துக்கும் மேல் பலத்த காயமடைந் தோருக்கும் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இருப்பினும், காயமடைந் தோருக்கான உதவித்தொகையானது, அவரது குடும்பத்தைச்சேர்ந்த யாருக்கும் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வேலை வாய்ப்பு அளிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அளிக்கப்படும்.

விரைவில் அறிவிக்கை: ரூ.5 லட்சம் நிதிவழங்கும் முடிவுக்கு விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத்தொடர்ந்து, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசுவெளியிடும் என்று அந்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட அப்பாவிமக்கள் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதுகாப்புப்படையினர் 7 பேர் பலியாகினர். அதே ஆண்டில், பயங்கரவாத தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 17 பேர் உயிரிழந்தனர். இதேபோல், மாவோயிஸ்டுகளின் வன்முறையில் பொது மக்கள் 168 பேர் இறந்தனர்.

இதுபோன்ற தாக்குதல்களில் உயிரிழக்கும் மத்திய பாதுகாப்புப்படையினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண உதவியும், அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...