வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை போன்ற வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதிவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தில்லியில் மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் செய்தியா ளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பயங்கரவாத தாக்குதல்கள், மதக் கலவரத்தில் உயிரிழக்கும் அப்பாவிமக்களுக்கு உதவிசெய்யும் திட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அமல்படுத்தப் பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை, பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழப் போர் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேற்கண்ட ரூ.3 லட்சம் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார். எனவே, நாட்டின் எந்தப்பகுதியிலும் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதலிலோ, மாவோயிஸ்ட் வன்முறையிலோ, எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடித் தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் பலியாகும் அப்பாவிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இந்தநிதியானது, உயிரிழப்பவரின் நெருங்கிய உறவினருக்கு அளிக்கப்படும்.

இதேபோல், தாக்குதலில் 50 சதவீதத்துக்கும் மேல் பலத்த காயமடைந் தோருக்கும் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இருப்பினும், காயமடைந் தோருக்கான உதவித்தொகையானது, அவரது குடும்பத்தைச்சேர்ந்த யாருக்கும் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வேலை வாய்ப்பு அளிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அளிக்கப்படும்.

விரைவில் அறிவிக்கை: ரூ.5 லட்சம் நிதிவழங்கும் முடிவுக்கு விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத்தொடர்ந்து, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசுவெளியிடும் என்று அந்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட அப்பாவிமக்கள் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதுகாப்புப்படையினர் 7 பேர் பலியாகினர். அதே ஆண்டில், பயங்கரவாத தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 17 பேர் உயிரிழந்தனர். இதேபோல், மாவோயிஸ்டுகளின் வன்முறையில் பொது மக்கள் 168 பேர் இறந்தனர்.

இதுபோன்ற தாக்குதல்களில் உயிரிழக்கும் மத்திய பாதுகாப்புப்படையினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண உதவியும், அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...