மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த ஜூலையில் 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது, அதை மேலும் 2 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அகவிலைப்படியை அதிகரிக்க, டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது, கடந்த ஜன., 1 முதல் கணக்கிடப்படும். ஏப்ரல் மாத சம்பளத்தில் கூடுதல் அகவிலைப்படியும், ஜன., பிப்., மார்ச் ஆகிய மூன்று மாத நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 6,614 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66.55 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவர். ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இது வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து, கோடைக்கால காரீப் பருவ விவசாயப் பணிகளுக்காக பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, 37,216 கோடி ரூபாய் மானியம் வழங்கவும், பீஹாரில் கிழக்கு கோசி கால்வாய் சீரமைப்பு மற்றும் மகாநந்தா படுகை நீர்ப்பாசன திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக 3,652.56 கோடி ரூபாய் வழங்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் மின்னணு உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியும் 6 மடங்கு அதிகரித்து, 2.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, குறைகடத்தி அல்லாத மின்னணு சாதன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு 22,919 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது, இந்த துறையில வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...