ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி நலத்திட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் ஆகியபகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 1947-ஆம் ஆண்டிலும், 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளிலும் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களின் போதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் மேற்குப்பகுதிகள் ஆகியவற்றில் இருந்து ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் தற்போது, ஜம்முகாஷ்மீரில் உள்ள ஜம்மு, கதுவா, ரஜெளரி ஆகிய பகுதிகளில் குடியேறினர். ஆனால், ஜம்முகாஷ்மீர் அரசியல்சாசனம் காரணமாக அந்த அகதிகளால் குடியுரிமை பெற முடியவில்லை.

அந்தமக்கள் மக்களவை தேர்தலில் வாக்களித்தாலும், ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தது. அதன்படி, துணை ராணுவப் படைகளில் சேர்தல், மாநிலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுதல், அகதிகளின் குழந்தைகளுக்கு கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் சேர அனுமதி உள்ளிட்ட சலுகைகள் அவற்றில் அடங்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கித்-பால்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 36,348 குடும்பங்களை ஜம்மு-காஷ்மீர் அரசு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள நலத் திட்டங்கள் கிடைக்கும். அந்தத் திட்டங்கள் குறித்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...