ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி நலத்திட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் ஆகியபகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 1947-ஆம் ஆண்டிலும், 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளிலும் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களின் போதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் மேற்குப்பகுதிகள் ஆகியவற்றில் இருந்து ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் தற்போது, ஜம்முகாஷ்மீரில் உள்ள ஜம்மு, கதுவா, ரஜெளரி ஆகிய பகுதிகளில் குடியேறினர். ஆனால், ஜம்முகாஷ்மீர் அரசியல்சாசனம் காரணமாக அந்த அகதிகளால் குடியுரிமை பெற முடியவில்லை.

அந்தமக்கள் மக்களவை தேர்தலில் வாக்களித்தாலும், ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தது. அதன்படி, துணை ராணுவப் படைகளில் சேர்தல், மாநிலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுதல், அகதிகளின் குழந்தைகளுக்கு கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் சேர அனுமதி உள்ளிட்ட சலுகைகள் அவற்றில் அடங்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கித்-பால்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 36,348 குடும்பங்களை ஜம்மு-காஷ்மீர் அரசு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள நலத் திட்டங்கள் கிடைக்கும். அந்தத் திட்டங்கள் குறித்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...