ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க சதி வெற்றிகரமாக முறியடிக்கும் இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச்சேர்ந்த நபர்களுக்காக ஆயுதங்களை கடத்திச் சென்ற நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறஇருக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பூச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களின் கையாளாக செயல்பட்டு வந்த நபரை பாதுகாப்பு படைவீரர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் உள்பட வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் முகமது ஷபீர் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அஷிம் கான் என்பவருக்காக சூரன்கோட்டில்இருந்து ஆயுதங்களை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.

ஏற்கனவே, குப்வாரா மாவட்டம், கெரான் செக்டாரில் உள்ளவனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை முறியடித்து, பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். மேலும், கடந்தஜூலை மாதம்கத்துவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்-இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்திருந்தனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதசெயல்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து முறியடித்து வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.