ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க சதி வெற்றிகரமாக முறியடிக்கும் இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச்சேர்ந்த நபர்களுக்காக ஆயுதங்களை கடத்திச் சென்ற நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறஇருக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பூச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களின் கையாளாக செயல்பட்டு வந்த நபரை பாதுகாப்பு படைவீரர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் உள்பட வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் முகமது ஷபீர் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அஷிம் கான் என்பவருக்காக சூரன்கோட்டில்இருந்து ஆயுதங்களை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.

ஏற்கனவே, குப்வாரா மாவட்டம், கெரான் செக்டாரில் உள்ளவனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை முறியடித்து, பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். மேலும், கடந்தஜூலை மாதம்கத்துவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்-இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்திருந்தனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதசெயல்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து முறியடித்து வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...