பொடுதலையின் மருத்துவக் குணம்

 பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வதாகவும், தாது பலமுண்டாக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பொடுதலை, சமூலச் சாற்றில் சமனளவு, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலைமுழுகிவரத் தலையில் உள்ள தோல்நோய், பொடுகு முதலியன தீர்ந்து குணமாகும்.

பொடுதலை இலையுடன் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கிச் சுடுசோற்றில் நெய்யுடன் உண்டுவர மார்புச்சளி, சுவாசக் காசம் தீர்ந்து குணமாகும்.

பொடுதலை இலையுடன் சீரகம் சமனளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமைத்தயிர் அல்லது வெண்ணெயில் கொடுக்க வெள்ளை படுதல் வெட்டைச்சூடு ஆகியவை தீர்ந்து குணமாகும்.

பொடுதலை இலை கைப்பிடி அளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்களவு சேர்த்து நெகிழ அரைத்து வாயிலிட்டு வெந்நீரில் குடுத்துவிட வேண்டும். இவ்விதமாக வெறும் வயிற்றில் 7 நாட்கள் செய்து உப்பிலாப் பத்தியம் இருந்து துவரம் பருப்பை மட்டும் வறுத்து தொட்டுக்கொள்ளச் செய்யவும்.

பொடுதலை இலையை சிறிய மஞ்சள் துண்டுடன் சேர்த்து அரைத்து ஆறாத புண்ணின்மேல் வைத்துக்கட்டி வந்தால் புண் ஆறி குணமாகும். தினசரி இவ்விதம் செய்து வரவேண்டும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...