ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும் இருப்பதாக மோடி நெகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், நோட்டுப் புத்தகங்களும் இருப்பதாகக் கூறி பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தைரியமாக வீடுகளை விட்டு வெளியே வந்து ஓட்டு போட்டுள்ளனர். இதுவரையில் நடைபெற்ற 7 தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, நேற்று நடந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக 60.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுயநல அரசியலால், காஷ்மீரில் உள்ள இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளனர். காஷ்மிரில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க தீவிரமாக உள்ளன. இந்த 3 கட்சிகளும் காஷ்மீருக்கு அழிவைத் தந்துள்ளன. இந்த கட்சிகள் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக அநீதியை இழைத்துள்ளன. முன்பு லால் சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றுவதற்கே அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே பா.ஜ.,வின் நோக்கமாகும், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...