ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும் இருப்பதாக மோடி நெகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், நோட்டுப் புத்தகங்களும் இருப்பதாகக் கூறி பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தைரியமாக வீடுகளை விட்டு வெளியே வந்து ஓட்டு போட்டுள்ளனர். இதுவரையில் நடைபெற்ற 7 தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, நேற்று நடந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக 60.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுயநல அரசியலால், காஷ்மீரில் உள்ள இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளனர். காஷ்மிரில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க தீவிரமாக உள்ளன. இந்த 3 கட்சிகளும் காஷ்மீருக்கு அழிவைத் தந்துள்ளன. இந்த கட்சிகள் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக அநீதியை இழைத்துள்ளன. முன்பு லால் சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றுவதற்கே அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே பா.ஜ.,வின் நோக்கமாகும், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.