மோடியின் பலுசிஸ்தான் வியூகம் உள்ளூர் துரோகிகளுக்கு பெரிய ஆப்பே

மோடி பலுசிஸ்தானைப்பற்றி பேசியதும்… காஷ்மீர் விடுதலைக்கு காவடிதூக்கும் உள்ளூர் துரோகிகளுக்கு பெரியபதட்டமே வந்துவிட்டது…

அதெப்படி மற்ற நாட்டின் விவகாரத்தில் தலையிடலாம் என அரவிந்த் கேஜ்ரிவால், திக்விஜய்சிங் போன்றோருக்கு தங்கள் வாக்குவங்கி விசுவாசத்தை பொங்க செய்தனர்… ஆனால் அதற்கு பின் பெரிய அரசியலே இருப்பது இந்து மண்டூக மடையன்களுக்கு தெரிய வாய்ப்பில்லை… அதை மோடி நன்றாகவே அறிந்துள்ளார்!
‪#‎இனி_கேம்_ஸ்டார்ட்‬ நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி…

அதை எதிர்பார்த்து காத்திருந்தது அமெரிக்கா… பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது .. எட்டும் தொலைவில் ஈரான் உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்

காஷ்மீர் மாதிரியே மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது. காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும் இந்தியாவுடனே இணைய விரும்பியது.

பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யா கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார். பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின் சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம், இந்தியாவில் இணைகிறோம் என்று நேருவுக்கு கடிதம் எழுதினார்

ஆனால் ஆனால் நமது (நேரு) மாமா மறுத்து விடடார். நீங்கள் பாகிஸ்தானுடன் இருப்பது தான் நல்லது என்று சொல்லி உலகில் தான் பெரிய சமாதான புறா என்று காட்டி கொண்டார்.

பலுசிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு உள்ளது ஏன் தெரியுமா ? இதற்கு பின்னால்இருக்கும் அரசியல் மிக தெளிவானது… பலுசிஸ்தான் மாநிலத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு தான் அதிகம்.

பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்கினால் வளைகுடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும். இதனால் சீனா தன் 30% பொருளாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது….

வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டி விட அமெரிக்காவும் நேரம் பார்த்து கொண்டு இருந்தது. இந்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தானும், சீனாவும் மற்ற ஆட்சியாளர்கள் போல் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தது. நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி

இந்நிலையில் பலுசிஸ்தான் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு போவதாக கூறினார். இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது. பாக்கிஸ்தான் அலறியது, அலருகிறது. ஏனென்றால் இந்த மாகாணத்தை வைத்து தான் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறது. இது தனி நாடானால் சீன பொருளாதாரம் மிகவும் பின் தங்கி விடும். பாகிஸ்தானுக்கு கடுகளவும் உதவி கிடைக்காது …

இந்த ராஜ தந்திரத்தை மோடி வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து விட்டார். அமெரிக்கா இதற்கு பின்பலமாக தீவிரமாக செயல் படுகிறது. நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.

அன்று மட்டும் நேரு பலுசிஸ்தானை நம்முடன் இணைத்து இருந்தால் இன்று சீனா அடையும் 30% லாபம் இந்தியா அடைந்திருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விரைவில் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை. அப்போது பலுசிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடாகி விடும். அது ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். மோடி அவர்களை பிரதமராக அடைந்தமைக்கு இந்தியர் ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...