வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

 வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் சுத்தப் படுத்தும்.

டெங்கு ஜுரம் வராமல் தடுக்க
வேப்ப இலைக் கொழுந்து, முடக்கற்றான், சுண்டைக்காய், மணத்தக்காளி, சுண்டை வற்றல் ஆகியவற்றை நெய் (அ) ஆமணக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவு போல் உண்ண வேண்டும்.

பூரான் கடி குணமாக
வேம்பின் பூவை தண்ணீர் விட்டு அரைத்துக் கறி செய்து உருட்டி உருண்டையாகச் செய்து சாப்பிட்டு வர பூரான் கடி, அரிப்பு ஆகிய பிணிகள் குணமாகும்.

பொடுகு, அரிப்பு, சொறி, ரணங்கள் குணமாக
வேப்ப பூக்களைச் சேகரித்து சுத்தம் பார்த்து 100 கிராம் எடுத்து மண்சட்டியில் இடவும். 200 மில்லி தண்ணீரில் 50 கிராம் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின்பு 200 மில்லி நல்லெண்ணெயை ஊற்றி எரியும் அடுப்பில் வைத்து தைலப் பதத்திற்கு வருமளவிற்கு காய்ச்சவும்.வடிகட்டி தலையில் தேய்த்து வர பொடுகு, அரிப்பு, சொறி, ரணங்கள் முதலியவை நீங்கி குணமாகும்.

தலைவலி, காதுவலி நீங்க
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூக்களைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். பித்த வாதத்தைப் போக்கும்.

பித்த வயிற்றுவலி
பித்தம் அதிகரித்தால் வயிற்றுவலி சிலருக்கு வரும். இந்த வயிற்று வலிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் இந்நோய் பூரணமாகத் தங்கிவிடும்.

புதிய வேப்பம்பூவை சுத்தம் செய்து இரண்டு ஆழாக்கு நீரில் இரவு அடுப்பில் சூடு செய்து வைத்துவிடுதல் வேண்டும். காலையில் எழுந்ததும், அடுப்பில் இருக்கும் கசாயத்தில் 4ல் ஒரு பங்கு குடிக்க வேண்டும். பின் 3 மணிநேரம் சென்ற பின்னர் மூன்றில் ஒரு பங்கைக் குடித்தல் வேண்டும். பின் நான்கு மணிநேரத்திற்குப் பின் இரண்டில் ஒரு பங்கைக் குடிக்க வேண்டும். மீண்டும் மீதமிருக்கும் கஷாயத்தை மாலையில் குடித்து விடுதல் வேண்டும்

இம்முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர குன்மம் என்னும் வயிற்றுவலி பூரணமாக நீங்கும்.

கட்டிகள் உடைய
வேப்பம் பூவையும், எண்ணெயையும் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மேல் வைத்துக் கட்டிவர வெகு விரைவிலேயே எவ்வளவு கொடிய கட்டிகளானாலும் உடையும்.

அஜீரணக் கோளாறுகள்
பித்தம் தொடர்பான எல்லாவிதமான பிணிகளையும், தீவிரமாகவும், துரிதமாகவும் விரட்டும் மகத்துவம் வேப்பம் பூவிற்கு உண்டு.

வெப்பம் பூவையும், நில வேம்பையும் சேர்த்துக் கசாயம் வைத்துச் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நல்ல பசி எடுக்கும்.

வயிற்றுக் கிருமிகள் நீங்க
வேப்பம்பூவுடன், மிளகு, சிறிது உப்புச் சேர்த்து அரைத்து வயது வந்தவர்களுக்கு சுண்டைக்காய் அளவும், குழந்தைகளுக்கு 1 முதல் 2 பட்டாணி அளவும்; தினசரி காலை, மாலை இருவேளையும் உள்ளுக்குள் கொடுத்துவர, வயிற்றில் உள்ள அனைத்துக் கிருமிகளும் சாகும்.

இந்த மருந்து உருண்டையை நீரில் கரைத்தும் உட்கொள்ளக் கொடுக்கலாம்.

இந்நோய்க்கு வேப்பம்பூவுக்குப் பதில் வேப்பந்தளிரையும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...