ஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும்

ஒடிஸாவில் கடந்த 17 ஆண்டுகளாக செயல் படாமல் ஊழல் அரசாகப் பொறுப்பில்இருக்கும் பிஜு ஜனதாதள ஆட்சியை வரும் 2019 சட்டப் பேரவைத்தேர்தலில் தூக்கியெறியுமாறு மாநில மக்களை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்.


புவனேசுவரத்தில் பாஜக சார்பில் மக்கள் விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் மாநிலத்துக்கு என்னசெய்தீர்கள்? என முதல்வர் நவீன் பட்நாயக்கைக் கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமராக இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி என்ன செய்தார்? என நவீன்பட்நாயக் எப்போதும் கேட்பார்.

கடந்த 17 ஆண்டுகளாக மாநிலத்துக்கு நீங்கள் (பட்நாயக்) என்ன செய்தீர்கள்? என நான் இப்போதுகேட்கிறேன். மற்ற மாநிலங்கள் நன்கு வளர்ச்சியடைந் திருக்கும் நிலையில் பட்நாயக் ஆட்சி காலத்தில் ஒடிஸா அப்படியே தேக்கமடைந்திருக்கிறது.


பவானிபாட்னாவில், பழங்குடி இனத்தைச்சேர்ந்த தனா மஜி என்பவர் இறந்துபோன தன் மனைவியின் உடலை ஆம்புலன்ஸ் இல்லாததால், தோளில் சுமந்து கொண்டு சுமார் 10 கி.மீ. தூரம் நடந்து வந்தசம்பவம் உலகையே உலுக்கியது. மேலும் ஜாஜ்பூர் மாவட்டம் நகாடா கிராமத்தில் ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் இறந்தது, ஜப்பானிய மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தத்தவறியது உள்ளிட்ட சம்பவங்களைக் காணும்போது மாநிலத்தை ஆளும் உரிமை உண்மையிலேயே உங்களுக்கு (பட்நாயக்) இருக்கிறதா? எனக் கேட்கத் தோன்றுகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் ஆட்சியில் இருந்தபோதிலும், குழாய்மூலம் குடிநீர் விநியோகிக்கும் வசதி அனைத்துக் கிராமங்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. மாநிலத்தில் இன்னும் 41 சதவீத குடும்பங்களுக்கு மின்இணைப்பு இல்லை.


பழங்குடியினர் கிராமங்களில் சுகாதார, மருத்துவ வசதிகளைக் காண முடியவில்லை.மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்க பிஜேடி அரசு தவறிவிட்டதால் தான் அவர்கள் ஆந்திரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் என அண்டை மாநிலங்களுக்கு வேலைதேடி படையெடுக்கின்றனர்.மாநிலம் எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்குமுற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் ஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும் என்றார் அமித் ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...