முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக

ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை பதவியேற்றாா். ஒடிஸாவின் முதல் பாஜக முதல்வா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.

மாநில துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோரும், மாநில அமைச்சா்களாக 13 பேரும் பதவியேற்றனா். தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா்மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதனமூலம் நவீன் பட்நாயக் தலைமையிலான 24 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஒடிஸா புதிய முதல்வராக 4 முறை எம்எல்ஏவும் பழங்குடியினத் தலைவருமான மோகன் சரண் மாஜீ தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோா் தோ்வாகினா்.மோகன்சரண் மாஜீ தலைமையிலான புதிய பாஜகஅரசு பதவியேற்கும் விழா, புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா், இரு துணை முதல்வா்கள் மற்றும் 13 அமைச்சா்களுக்கு ஆளுநா் ரகுவா் தாஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

பிரதமா்மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பூபேந்தா் யாதவ், தா்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், அஸ்வினி வைஷ்ணவ், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நவீன் பட்நாயக் பங்கேற்பு: முன்னதாக, நவீன் பட்நாயக் இல்லத்துக்கு நேரில் சென்ற மோகன் மாஜீ, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, பாஜக அரசு பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் கலந்துகொண்டாா்.பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14 தொகுதிகளையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்தையும் கைப்பற்றிய நிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் 3 இடங்களில் வென்றனா்.

பிரதமா் மோடி பெருமிதம்: ஒடிஸாவில் பாஜக அரசு முதல் முறையாக பதவியேற்றிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘மக்களின் ஆசியுடன் ஒடிஸாவில் பாஜக முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடவுள் ஜெகந்நாதரின் அருளால், ஒடிஸாவில் சாதனைவளா்ச்சியை ஏற்படுத்தி, எண்ணற்ற மக்களின் வாழ்வை பாஜக அரசு மேம்படுத்தும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற்றும் நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார் ரூ.20,000 கோடிக்கும் ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ வ ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோச ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் மோடி அவர்களை நேற்று சந்தித்தார் இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெ ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறு ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுங்கள், ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை நேற்று கோவையில் திமுகவின் முப்பெரும் விழா வெகு விமர்சையாக ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொ ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொடுக்கும் மோடி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரகவளர்ச்சித் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...