தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்க, கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன, ” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை கொட்டிவாக்கம் கடற்கரையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பா.ஜ.,வில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம்.
மிகப்பெரிய கட்சி என்றால் அது பா.ஜ., தான்.பெரிய கட்சி என்றால் அதிக உறுப்பினர்கள் இருக்கறார்கள் என்று அர்த்தம். ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பா.ஜ., மட்டும் தான்.மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன?பா.ஜ., திறமை உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும்.
மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் கொண்டு வந்தது பிரதமர் மோடிதான். பா.ஜ., ஆட்சியில் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |