தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்க, கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன, ” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை கொட்டிவாக்கம் கடற்கரையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பா.ஜ.,வில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம்.
மிகப்பெரிய கட்சி என்றால் அது பா.ஜ., தான்.பெரிய கட்சி என்றால் அதிக உறுப்பினர்கள் இருக்கறார்கள் என்று அர்த்தம். ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பா.ஜ., மட்டும் தான்.மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன?பா.ஜ., திறமை உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும்.
மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் கொண்டு வந்தது பிரதமர் மோடிதான். பா.ஜ., ஆட்சியில் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |