கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை எதிலும் தீர்வு உருவாக கூடாது என்பதில் தெளிவானவர்கள்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடைபெற்ற பேருந்து ஊழியர் – அரசு பேச்சு வார்த்தை தோல்வி ஏற்பட்டு ஊழியர் போராட்டம் இன்றே துவங்கி பொதுமக்கள் பாதிப்படைவது ஏற்புடையது அல்ல அதே நேரத்தில் தொழிலாளர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளையாவது அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த பேருந்து தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்று இயக்கும் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் தீடிர் முடிவால் பேருந்துகளை அன்றாடம் பயன்படுத்தும் ஏழை எளிய நடுத்தர மக்களை நடு வீதியில் பரிதவிக்கவிடுவது நியாயமா?

பேருந்து தொழிலாளர் சும்மார் 1.5 லட்சம் பேர் உரிமைகள் காக்கப் படவேண்டும் என்பது சரியே, அதே வேளையில் அரசு பேருந்தில் தினசரி பயணிக்கும் சுமார் 15 லட்சம் பொது மக்கள் நலனும் பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? நாளை முதல் போராட்டம் என்று அறிவித்து விட்டு இன்றய திடீரென பொதுமக்களை நடுவழியில் குழந்தை குட்டிகளோடு இறக்கி விட்டு பரிதவிக்க விடுவது என்ன நியாயம். அரசாங்கம் என்ன சொன்னாலும் போராட்டம் நடந்தே தீரும் என்று முழங்கும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வெற்றி புன்னகை கவனிக்கப்படவேண்டியது.

கம்யூனிஸ்டுகள் பொறுத்தமட்டில் எதிலும் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை வீட தீவிரமாக போராட்டம் நடைபெற வேண்டும் என்பதிலே அதிகம் நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் தொழிற்சாலைகளை இயங்கவிடமாட்டார்கள் பேருந்துகளை ஓடவிடமாட்டார்கள், புதிதாக நிறுவனங்களை நிறுவ விடமாட்டார்கள் இருக்கும் தொழிலாளர்களையும் நிம்மதியாக வாழவிடமாட்டார்கள், ஆக உள்நோக்கமுள்ள இவர்களது பின்புலத்தை அரசு கவனித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களை போராட்டம் நடத்த விட்டு விட்டு பின்பு நடவடிக்கை எடுப்பது விட போராட்டம் நடைபெறாமல் / பரவாமல் பார்த்துக்கொள்வது தான் அரசாங்கம் மக்களுக்கு செய்யும் கடமையாகும். போராட்டத்தின் நடுவே எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை   நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்து கழகங்களின் கடன் சுமையும் நிலுவை தொகையும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சனை என்பதால் இதுவும் தமிழகத்தை இதுவரை ஆண்ட கழக ஆட்சிகளின் நிருவாக சீர்கேடுகளை காட்டுவதால் இவைகளும் சீர்செய்யப்பட வேண்டும் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் எல்லாம் லாபகரமாக இயங்கும் காலகட்டத்தில் அரசு பேருந்துகள் எல்லாமே பெரும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? இதனை சீர்செய்ய உடனடி நடவடிக்கைகள் தேவை. இந்த போராட்ட நேரத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளை அடிக்காமல் பொது மக்களை பாதுகாக்க வேண்டும்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...