நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களில் பாதுகாப்பு சோதனையை நடத்தி முடித்துள்ளோம்

நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களில் மத்திய நெடுஞ் சாலைகள் துறை அமைச்சகம் பாதுகாப்பு சோதனையை நடத்தி முடித்துள்ளதாக அத்துறையின் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:
விவபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான பாலங்கள் மற்றும் தரைப் பாலங்கள் ஆகியவை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த பாலமேலாண்மை அமைப்பை (ஐபிஎம்எஸ்) எங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டு தொடங்கியது.


அதன்படி, முதல் கட்டமாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 186 பாலங்களை அந்த அமைப்பு சோதித்து முடித்துவிட்டது.
அவற்றில் 147 பாலங்கள் மிகவும் மோசமான நிலையிலும், உடனடி கவனம்செலுத்த வேண்டியவையாகவும் உள்ளன. மேற்கண்ட பாலங்களில் 23 பாலங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
பாலங்களை கண்காணிக்க நானோ, லேசர், சென்சார் போன்ற நவீனதொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றைச் சோதனை செய்வதற்கு ராடார்கள், அகச்சிவப்புக்கதிர் வசதி கொண்ட ஆளில்லா குட்டி விமானங்கள் ஆகியவை பயன்படுத்தப்படும்.


ஐபிஎம்எஸ் அமைப்பு கடந்த ஆண்டில் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப் பட்டது. இந்த அமைபப்பை உருவாக்குவதற்கு முன்பு பாலங்களை வரைபடரீதியில் அடையாளம் காண எந்தவொரு அமைப்பும் இல்லை. பல்வேறு பாலங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. அவை இடிந்துவிழும் நிலையில் உள்ளன.
தற்போது 1.6 லட்சம் பாலங்கள் குறித்த தகவல்தொகுப்பை ஐபிஎம்எஸ் அமைப்பு உருவாக்கியுள்ளது. அவை பல்வேறு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது பாதுகாப்பு பிரச்னைகளை தீர்ப்பதற்கான நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கும் என்றார் கட்கரி.


கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎம்எஸ் அமைப்பின் கூட்டத்துக்கு அவர் தலைமைவகித்தார். பாலங்களின் தேசிய அடையாள எண், அட் ரேகை, தீர்க்க ரேகை போன்ற விவரங்கள், பாலம் அமைந்துள்ள பகுதியின் சமூக}பொருளாதாரத் தகவல்கள் போன்ற விவரங்களை ஐபிஎம்எஸ் அமைப்பு திரட்டியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...