முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம் -ராஜ்நாத் சிங் அறிவுரை

‘எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின், இந்தூரில் இந்திய ராணுவ வீரர்களிடம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களை கூர்மையாக கண்காணிக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பு சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாரதம் மிகவும் அதிர்ஷ்டமான நாடு அல்ல. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறோம். நாம் அமைதியாக, அக்கறையின்றி இருக்க முடியாது.

நமது எதிரிகள், உள் அல்லது வெளிப்புறமாக இருந்தாலும், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகளில், அவர்களின் செயல்பாடுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில், ‘எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

2047ம் ஆண்டிற்குள் பாரதத்தை வளர்ந்த மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்ற வேண்டும். இதற்கு, ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. வேலையின் மீதான உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை மிகவும் முக்கியம். இது நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...