நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை கட்டி வழங்க பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2015 ஜூன் 25 முதல் செயல்படுத்தப்படுகிறது.
15.07.2024 நிலவரப்படி, 118.63 லட்சம் வீடுகளை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 114.33 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இவற்றில் 85.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திட்ட வழிகாட்டுதல்களின்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் உதவி மூன்று தவணைகளில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 40%, 40% மற்றும் 20% என்ற விகிதத்தில் விடுவிக்கப்படுகிறது. இதுவரை மொத்தம் ₹ 1,99,652 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |