இறந்தவரின் சடலம் மீது அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு கேள்விகள் :

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் அவசர மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) மசோதா, 2016 மக்களவையில் 19 ஜூலை 2016 அன்று விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்படுகிறது. மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விடுகின்றனர். தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர்கள் யாரும் மக்களவை உறுப்பினர்களாக இல்லாததால் தங்களது கருத்தை சொல்ல வாய்ப்பில்லை.

ஆனால், மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மாநிலங்களவையில் 1 ஆகஸ்டு 2016 அன்று விவாதித்திற்கு வந்த போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்?

1. மூன்று உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரான திருச்சி சிவா அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டாரா? இல்லையா? (அதே தினம் காலை 11.00 மணிக்கு தான் அதே மாநிலங்களவையில் திருமதி. சசிகலா புஷ்பா தன்னை முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தாக்கியதாக குற்றம் சுமத்தியதையும் அதற்கான காரணம் திருச்சி சிவாவுடனான விமான நிலைய நிகழ்வு என்பதையும் நினைவில் கொள்ளவும்).

2. தி.மு.க.வின் மற்றொரு உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு குறுக்கீடு செய்ய முற்பட்டாலும், மசோதாவிற்கு சம்பந்தமில்லாமல் பேச முயன்றதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது. இருந்த போதிலும் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க முயற்சி செய்யாமல் அமர்ந்து விடுகிறார். ஏன் தனது தரப்பு வாதத்தை முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை? Point of order ஏன் கொண்டு வரவில்லை?

3. அடுத்து மசோதா மீது பேசிய திருமதி. கனிமொழி கூறியதைப் பார்ப்போம் :

"There are a lot of problems with these medical colleges. We don't have enough medical colleges and there is a problem of capitation and management fee and it is very high."

இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவரே கொடுத்துள்ளார். இதை அவர் மறுப்பாரா?

4. மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தி.மு.க. உறுப்பினர்கள் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை? (அ.தி.மு.க.வினர் வெளிறடப்பு செய்தனர்).

5. குரல் வாக்கெடுப்புக்கு எதிராக Division ஏன் கோரவில்லை?

6. Division கோரியிருந்தால் தங்களது எதிர்ப்பை சட்ட மசோதாவுக்கு எதிராக பதிவு செய்ய இயலும் என்ற விதி இவர்களுக்கு தெரியாதா?

பாராளுமன்றத்தின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளின்போது கை கட்டி, வாய் பொத்தி மெளனம் சாதித்து விட்டு இன்று சகோதரி அனிதாவின் இறப்பை அரசியலாக்க முற்படுபவர்களின் உண்மை நிறத்தை போராட்டம் நடத்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் உண்மை ஓங்குக |.

நன்றி ; ஆசிர்வாதம் ஆசாரி

One response to “இறந்தவரின் சடலம் மீது அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு கேள்விகள் :”

  1. செ.சுகுமாா் says:

    மாநில பாடத்திட்டத்தில் படித்தவா்களை மத்திய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் தோ;வை எழுதச் சொல்வது முட்டாள்தனம். இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு மாணவி அனிதா பலியாகியுள்ளாா். இப் பெண்ணின் அவசர முடிவு என்றாலும் மத்திய அரசு குறைந்தது 4 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளித்து மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...