வக்ப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பார்லிமென்ட்

வக்ப் ராஜ்யசபாவில், 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த மசோதாவுக்கு, பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.

முஸ்லிம்கள் தானமாக வழங்கும் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ப் வாரிய சட்டங்களில், பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப் திருத்த மசோதா – 2025 லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேறியது.

லோக்சபாவில் கடந்த, 2ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 13 மணி நேர விவாதத்துக்குப் பின் ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக, 288 ஓட்டுகளும், எதிர்ப்பாக 232 ஓட்டுகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியது.

ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின், 128 ஆதரவு ஓட்டுகளுடன் மசோதா நிறைவேறியது. 95 பேர் எதிர்த்து ஓட்டுபோட்டனர்.

இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வக்ப் திருத்த மசோதாவுக்கு பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நம் அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் உறுதியாக எதிர்ப்போம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை ...

அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் – அண்ணாமலை ''மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை. வருகைக்கான ...

வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்� ...

வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்த ...

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்� ...

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் – அமைச்சருக்கு வானதி சீனிவாசன் அறிவுரை ''இந்திய பொறியாளர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை, குறைத்து ...

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதை� ...

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, ...

தமிழகம், பீகார் சட்டசபை தேர்தலி ...

தமிழகம், பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் : அமித்ஷா ''தமிழகம், பீஹார் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்த� ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர உறுப்பினராக முழு ஆதரவு ஆதரவு; ஸ்லோவாக்கியா அதிபர் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...