இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைதியாக நடக்கிறது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2022ல் இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்துக்கு அறிவியல் அறிஞர்கள், இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி ஆகியவை இணைந்து இந்த சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகின்றன. இந்த விழா வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.

விழாவில் ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித் துறை அமைச்சர் அப்துல் லத்தீப் ரோஷன், வங்கதேச அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் யாபிஸ் ஓஸ்மான், மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியதாவது: வரும், 2022க்குள், நம் நாட்டில், அனைவரும் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் கனவு.
அவரின் கனவை நனவாக்குவதன் முன்னோடியாக, மூன்றாவது ஆண்டாக, இந்தியசர்வதேச அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சி நடத்துவதற்கு முன், உலக பட்டியலில் இடம்பெறாமல் இருந்த, இந்திய கல்வி நிறுவனங்கள், முதல், 100 மற்றும், 75 நிறுவனங்கள்பட்டியலில், இருஆண்டுகளாக இடம் பெற்றுள்ளன; அந்த அளவுக்கு முன்னேற்றம் உள்ளது.


நம் தொழில்நுட்பங்களை, உலக நாடுகள் கவனிக்கின்றன. குறிப்பாக, இந்தியவிண்வெளி ஆராய்ச்சியை பார்த்து, அறிவியல் உலகமே வியக்கிறது. வளர்ந்த நாடுகளும், தங்களின் செயற்கைக்கோள்களை, இங்கிருந்து ஏவுகின்றன. அது போல், மற்ற துறைகளிலும், நாம் வளர வேண்டும். இவ்வாறு ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். 

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: அறிவியல் கிராமம் என்ற பெயரில் ‘பாராளுமன்றத்தில் இருந்து பஞ்சாயத்து’ என்ற மாதிரி அமைப்பு சென்னை தோல்ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 1750 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மாணவ, மாணவியர் அறிவியல் ஆய்வுகளில் இளம் வயதில் இருந்தே ஈடுபட வேண்டும். மேலைநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மாணவர்கள் அறிவியலில் ஈடுபடுவது குறைவுதான். அடிப்படை அறிவியலில் தாவரவியல், விலங்கியல் தவிர்த்து தொழில்நுட்ப அறிவியல், ஸ்டெம்செல் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மருந்து கண்டுபிடிப்பு அது தொடர்பான தொழில் நுட்பம் சார்ந்த ஆய்வு படிப்புகளையே அதிக அளவில் தேடிச் செல்கின்றனர்.

இந்தியர்கள் பற்பல அறிவியல் தொழில்நுட்ப சிந்தனைகளில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்பவர்கள். அதனால்தான் புதுமை கண்டுபிடிப்பு தொடக்க திட்டம் மூலம் மனித வள மேம்பாட்டை உயர்த்த தமிழக அரசு ரூ.20 கோடி வழங்கியுள்ளது. அறிவியல்  வரலாற்று பின்னணியில் வளர்ந்த, ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...