இன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல் வளர்ச்சி மூலம்தான் தீர்வுகாண முடியும்

இன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல்வளர்ச்சி மூலம் தான் தீர்வுகாண முடியும்
இந்தியாவின் கலாசாரம், பாரம் பரியத்தின் ஒரு பகுதியாக அறிவியல் தொழில்நுட்பம் விளங்கியது. முந்தைய காலகட்டத்தில் உலக நாடுகளிலேயே அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாதான் சிறந்து விளங்கியது.


பூஜ்யத்தின் பயன்பாடு, அல்ஜீப்ரா, அணு கோட்பாடுகளையும் இந்தியர்கள்தான் உலகுக்கு அறிமுகம் செய்தனர். வானிலை ஆராய்ச்சி, யோகா, ஆயுர் வேதம் என பல்வேறு துறைகளில் பண்டைய இந்தியா தலை சிறந்து விளங்கியது.


ஆனால், மொகலாயர் படையெடுப்பு, காலனி ஆதிக்கம் போன்ற வற்றால் இந்தியா தனது அனைத்து திறன்களையும் இழக்கநேரிட்டது. அவ்வாறு இழந்த இந்தியாவின் பண்டைய பெருமைகளை மீட்க ஒவ்வொரு இந்தியரும் பாடுபட்டு, அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்.


அதற்கு, மாநில அரசுகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் துறையினரும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பல்வேறு துறைகள்ல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனில், அறிவியல் தொழில் நுட்பத்தில் புதிய இலக்கை இந்திய அடையவே முடியாது.


அதிக முதலீடுகள் அவசியம்: வறுமை, வேலை யில்லாத் திண்டாட்டம், சுற்றுச்சூழல் மாசு, நோய்கள், நகர்ப்புற-கிராமப்புற ஏற்றத் தாழ்வு, சுகாதாரமான குடிநீர் போன்ற நிகழ்கால மற்றும் எதிர்காலப் பிரச்னைகளுக்கு அறிவியல் மூலம் மட்டுமே நாம் தீர்வுகாண முடியும். எனவே, அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு அதிகமுதலீடுகள் செய்ய வேண்டியது அவசியம்.
சிறப்பு நிதித்தொகுப்பு தேவை:

கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சிறப்பு நிதித் தொகுப்பை உருவாக்கித் தர முன்வரவேண்டும். இளம் ஆராய்ச்சியாளர்கள் எந்தவிதத் தங்கு தடையும் இன்றி சிந்திக்கவும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் வகையிலும், அவர்களுக்கான உகந்த சூழலை இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக்கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் உருவாக்கித் தரவேண்டும்.


மாணவர்களிடையே…: பள்ளி மாணவர்களிடைய அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அறிவியல் தொழில் நுட்பத் துறை இணைந்து பணியாற்றுவது அவசியம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்

என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.


இந்திய சர்வதேச அறிவியல் விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக வளாகங்களில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை (அக்.16) வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...