பப்பாளியின் மருத்துவக் குணம்

 கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்சனைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த வழி.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத் தொல்லை, மலச் சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச் சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளியை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது.

சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஷ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக் காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூடும்.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

 

பப்பாளி வைட்டமின் ஏ, பி, சி செறிவுடையது. நலமளிப்பது, சீரணிப்பது, மலமிளக்கி, இளமையும் வனப்பும் தருவது. நன்கு பழுத்த பழம் சீரணக் கோளாறுகளைத் தீர்க்கும். தொடர்ந்து பயன்படுத்த வயிற்றுத் தொந்தரவுகள் அனைத்தையும் குணப்படுத்தும்.

பப்பாளிக்காய் மஞ்சட் காமாலை, இரப்பை சவ்வு அழற்சி மற்றும் கல்லீரல் கோளாறுகளில் பரிந்துரைக்கப்படும். முலாம் பழம் போன்று இருக்கும். கொத்துக் கொத்தாய் காய்க்கும். மரம் 20 அடி உயரம் வளரும்.

சீரணத்துக்கு உதவும் பெப்சின் என்கிற சத்து நீர் பப்பாளிக் காயில் உண்டு. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாப்பெய்ன் மருந்துத் தயாரிப்புத் தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படும். முதுமை அடைகிறபோது நம்முடைய உடம்பில் உள்ள இயற்கையான ரசங்கள் குறைந்த அளவே சுரக்கும். அதனால் முழுமையாக சீரணிக்க முடிவது இல்லை. அதன் விளைவாக வாயுத் தொல்லை, நெஞ்செரிவு, உப்புசம், வயிற்றில் அசவுகர்யம் ஏற்படும். அப்போது பப்பாளியில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள் தீர்வாக இருக்கும்.

குடல் உபாதைகள்
இரப்பைரசம், வயிற்றில் உள்ள ஆரோக்கியக் கேடான சளிப்படலம், அசீரணம், குடல் எரிச்சலில் நல்ல பலனை அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை சரி செய்யும். நாட்பட்ட வயிற்றுப்போக்கு, பித்தப்பையில் இரத்தக் கசிவு இவற்றையும் பப்பாளிப்பழம் குணப்படுத்தும். பப்பாளி விதைச்சாறு மூலத்தில் இரத்தம் வடிவத்தைத் தடுக்கும்.

தொண்டை உபத்திரவங்கள்
பப்பாளிபழச் சாற்றுடன் தேன்கலந்து கொடுக்க டிப்தீரியா, தொண்டை அழற்சி போன்ற கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். சவ்வுப்படலத்தைக் கரைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...