நிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு

வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான வாராக்கடன்களை ஆய்வு செய்யும் படியும், அதுதொடர்பான புகார்களை, சிபிஐ.,க்கு தெரிவிக்கும் படியும், பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரபல நகைவியாபாரி, நிரவ் மோடியும், அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனஅதிபருமான, மெஹல்சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிசெய்தது, சமீபத்தில் அம்பலமானது. இந்தசம்பவம், நாடுமுழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின், நிதிசேவைகள் பிரிவுசெயலர், ராஜீவ் குமார், 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவுவிபரம்: பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள்,தங்கள் வங்கிகளில் உள்ள, 50 கோடி ரூபாய்க்கு அதிகமான வாராக்கடன்கள் குறித்து, தீவிர ஆய்வுமேற்கொள்ள வேண்டும். அதில், மோசடி கண்டறியப்பட்டால், அதுதொடர்பாக உடனடியாக, சி.பி.ஐ.,க்கு புகார் செய்ய வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவுப்படி, பொதுத் துறை வங்கிகளில், 50 கோடி ரூபாய்க்கு அதிகமாக நடக்கும் நிதிமோசடிகள் குறித்து, சி.பி.ஐ.,க்கு புகார் அளிக்கப்பட வேண்டும். மோசடிபுகார் விசாரணையின்போது,சி.பி.ஐ.,க்கு, சம்பந்தப்பட்ட வங்கியின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மேலும், வாராக்கடனாக மாறிய வங்கிகணக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தொடர்பான அறிக்கையை, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பிடம், வங்கிகள் கேட்டுப்பெற வேண்டும். தேவைப்பட்டால், வருவாய் புலனாய்வு. இயக்ககம், அமலாக்கத் துறை போன்றவற்றின் உதவியையும், வங்கிகள்நாடலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...