தியானம் என்றால் என்ன?

 தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும்.

மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர்.

மனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியது. சுட்டிக் குழந்தையைப் போல அல்லது குட்டி நாயைப் போல ஒரு கன்று குட்டிப் போல செயல்படுவது மனம்.

எதையாவது அர்த்தமில்லாமல் செய்து கொண்டும், குறிக்கோளின்றி அலைந்து கொண்டும் தன் இச்சைப்படி சுற்றிக் கொண்டிருப்பது மனம். எனவே மனதைப் பொருளோடு வேலையில் ஈடுபடுத்துவதும் ஒரு குறிக்கோளில் இயங்க வைப்பதும், அடங்கி இயங்கிச் செய்வதும் மிகக் கடினமாகும்.

தன் போக்கில் விரைவாக அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் எண்ணங்கள் பல்வேறு செய்திகளில் நாலா பக்கங்களிலும் சிதறிக் கொண்டிருக்கின்றன.

இவை அடக்கப்பட்டால் அல்லது ஒரு பொருளில் குவிக்கப்பட்டால் அளவற்ற மின்சக்தி வீணாக்காமல் சேமிக்கப்படும். அப்படிப்பட்ட மனம் கூர்மையானதாகவும் வலுமையானதாகவும் ஆகிறது. குறிப்பிட்ட வேலையில் மட்டும் ஈடுபடுவதாகவும் வெற்றியைத் தருவதாகவும் இருக்கும்.

இதுபோல வீணாகும் மனசக்தியைச் சேமித்து வலிமை மிக்கதாக மனதை வலுவடையதாகக் செய்ய ஒரு பயிற்சி தேவை. அப்பயிற்சிதான் தியானம்.

ஒரு பொருளை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு ஆன்மாவை குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொள்வது தியானமாகும்.

இடைவிடாத நினைவே தியானம் எனப்படும். ஒரே பொருளைப் பற்றிய தொடர்ச்சியான நினைவே தியானம் எனப்படுகிறது. ஒரு பொருளில் மட்டுமே குவிக்கப்பட்ட மனம் வேறு செய்திகளைப் பற்றிய குறுக்கீடு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால் அதற்குத் தியானம் என்று பெயர்.

தியானம் – தவம் – Meditation எல்லாம் ஒன்றுதான். தவம் : தன்னை அறிந்து தலைவனாகிய இறைநிலையை அறிதல். இதைத்தான் வள்ளலார் "தலைவா நினை பிரியாத நிலையையும் வேண்டுவனே" என்றார்.

'தீ' என்றால் அறிவு. தியானம் என்றால் பயணம். நம் மனதை அறிவை நோக்கிச் செலுத்துதல் தானமாகும். ஞானமே வடிவமாகக் கொண்ட ஆன்ம ஸ்வருபத்தில் மனதை நிலைக்கச் செய்வது தியானமாகும்.

புலன்களை நோக்கி மனிதன் ஒட்டத்தைத் தடுத்து அதை உள்முகமாகச் செலுத்தி அதற்கு ஒளியைத் தந்த ஆன்மாவில் இரண்டறக் கலக்கச் செய்வதே தியானமாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றேயாகத் தூயதாக, சிதறாததாக, வலிமையுடன், தெளிவுடன் இருக்கும் மனநிலைக்கு தியானம் என்று பெயர். இது அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது படியாகும்.

விஞ்ஞானத்தில் தொட முடியாத அடிப்படை பிரச்சனை தியானம் தான். அது வசமானால் உங்கள் ஆளுமை அங்கீகாரம் பெரும். அதனுடைய நறுமணம் எங்கும் எதிலும் பரவும்.

தன்னை அறிவது தியானமா? அல்லது தன்னை அறிவதன் மூலம் தன் ஆன்மாவை அறிவது தியானமா? அல்லது தன் ஆன்மாவை உணர்வதின் மூலம் வெட்ட வெளியில் தன்னை தொடர்புபடுத்திக் கொள்வது தியானமா? அல்லது ஜீவாத்மாவை பரமாத்வாவோடு இணைத்துப் பிறவி என்னும் பெருங்கடலை கடப்பது தியானமா? என்றால் இவை அனைத்தும் தியானம் என்று பொருளாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...