தியானம் என்றால் என்ன?

 தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும்.

மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர்.

மனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியது. சுட்டிக் குழந்தையைப் போல அல்லது குட்டி நாயைப் போல ஒரு கன்று குட்டிப் போல செயல்படுவது மனம்.

எதையாவது அர்த்தமில்லாமல் செய்து கொண்டும், குறிக்கோளின்றி அலைந்து கொண்டும் தன் இச்சைப்படி சுற்றிக் கொண்டிருப்பது மனம். எனவே மனதைப் பொருளோடு வேலையில் ஈடுபடுத்துவதும் ஒரு குறிக்கோளில் இயங்க வைப்பதும், அடங்கி இயங்கிச் செய்வதும் மிகக் கடினமாகும்.

தன் போக்கில் விரைவாக அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் எண்ணங்கள் பல்வேறு செய்திகளில் நாலா பக்கங்களிலும் சிதறிக் கொண்டிருக்கின்றன.

இவை அடக்கப்பட்டால் அல்லது ஒரு பொருளில் குவிக்கப்பட்டால் அளவற்ற மின்சக்தி வீணாக்காமல் சேமிக்கப்படும். அப்படிப்பட்ட மனம் கூர்மையானதாகவும் வலுமையானதாகவும் ஆகிறது. குறிப்பிட்ட வேலையில் மட்டும் ஈடுபடுவதாகவும் வெற்றியைத் தருவதாகவும் இருக்கும்.

இதுபோல வீணாகும் மனசக்தியைச் சேமித்து வலிமை மிக்கதாக மனதை வலுவடையதாகக் செய்ய ஒரு பயிற்சி தேவை. அப்பயிற்சிதான் தியானம்.

ஒரு பொருளை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு ஆன்மாவை குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொள்வது தியானமாகும்.

இடைவிடாத நினைவே தியானம் எனப்படும். ஒரே பொருளைப் பற்றிய தொடர்ச்சியான நினைவே தியானம் எனப்படுகிறது. ஒரு பொருளில் மட்டுமே குவிக்கப்பட்ட மனம் வேறு செய்திகளைப் பற்றிய குறுக்கீடு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால் அதற்குத் தியானம் என்று பெயர்.

தியானம் – தவம் – Meditation எல்லாம் ஒன்றுதான். தவம் : தன்னை அறிந்து தலைவனாகிய இறைநிலையை அறிதல். இதைத்தான் வள்ளலார் "தலைவா நினை பிரியாத நிலையையும் வேண்டுவனே" என்றார்.

'தீ' என்றால் அறிவு. தியானம் என்றால் பயணம். நம் மனதை அறிவை நோக்கிச் செலுத்துதல் தானமாகும். ஞானமே வடிவமாகக் கொண்ட ஆன்ம ஸ்வருபத்தில் மனதை நிலைக்கச் செய்வது தியானமாகும்.

புலன்களை நோக்கி மனிதன் ஒட்டத்தைத் தடுத்து அதை உள்முகமாகச் செலுத்தி அதற்கு ஒளியைத் தந்த ஆன்மாவில் இரண்டறக் கலக்கச் செய்வதே தியானமாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றேயாகத் தூயதாக, சிதறாததாக, வலிமையுடன், தெளிவுடன் இருக்கும் மனநிலைக்கு தியானம் என்று பெயர். இது அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது படியாகும்.

விஞ்ஞானத்தில் தொட முடியாத அடிப்படை பிரச்சனை தியானம் தான். அது வசமானால் உங்கள் ஆளுமை அங்கீகாரம் பெரும். அதனுடைய நறுமணம் எங்கும் எதிலும் பரவும்.

தன்னை அறிவது தியானமா? அல்லது தன்னை அறிவதன் மூலம் தன் ஆன்மாவை அறிவது தியானமா? அல்லது தன் ஆன்மாவை உணர்வதின் மூலம் வெட்ட வெளியில் தன்னை தொடர்புபடுத்திக் கொள்வது தியானமா? அல்லது ஜீவாத்மாவை பரமாத்வாவோடு இணைத்துப் பிறவி என்னும் பெருங்கடலை கடப்பது தியானமா? என்றால் இவை அனைத்தும் தியானம் என்று பொருளாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...