தியானம் என்றால் என்ன?

 தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும்.

மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர்.

மனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியது. சுட்டிக் குழந்தையைப் போல அல்லது குட்டி நாயைப் போல ஒரு கன்று குட்டிப் போல செயல்படுவது மனம்.

எதையாவது அர்த்தமில்லாமல் செய்து கொண்டும், குறிக்கோளின்றி அலைந்து கொண்டும் தன் இச்சைப்படி சுற்றிக் கொண்டிருப்பது மனம். எனவே மனதைப் பொருளோடு வேலையில் ஈடுபடுத்துவதும் ஒரு குறிக்கோளில் இயங்க வைப்பதும், அடங்கி இயங்கிச் செய்வதும் மிகக் கடினமாகும்.

தன் போக்கில் விரைவாக அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் எண்ணங்கள் பல்வேறு செய்திகளில் நாலா பக்கங்களிலும் சிதறிக் கொண்டிருக்கின்றன.

இவை அடக்கப்பட்டால் அல்லது ஒரு பொருளில் குவிக்கப்பட்டால் அளவற்ற மின்சக்தி வீணாக்காமல் சேமிக்கப்படும். அப்படிப்பட்ட மனம் கூர்மையானதாகவும் வலுமையானதாகவும் ஆகிறது. குறிப்பிட்ட வேலையில் மட்டும் ஈடுபடுவதாகவும் வெற்றியைத் தருவதாகவும் இருக்கும்.

இதுபோல வீணாகும் மனசக்தியைச் சேமித்து வலிமை மிக்கதாக மனதை வலுவடையதாகக் செய்ய ஒரு பயிற்சி தேவை. அப்பயிற்சிதான் தியானம்.

ஒரு பொருளை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு ஆன்மாவை குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொள்வது தியானமாகும்.

இடைவிடாத நினைவே தியானம் எனப்படும். ஒரே பொருளைப் பற்றிய தொடர்ச்சியான நினைவே தியானம் எனப்படுகிறது. ஒரு பொருளில் மட்டுமே குவிக்கப்பட்ட மனம் வேறு செய்திகளைப் பற்றிய குறுக்கீடு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால் அதற்குத் தியானம் என்று பெயர்.

தியானம் – தவம் – Meditation எல்லாம் ஒன்றுதான். தவம் : தன்னை அறிந்து தலைவனாகிய இறைநிலையை அறிதல். இதைத்தான் வள்ளலார் "தலைவா நினை பிரியாத நிலையையும் வேண்டுவனே" என்றார்.

'தீ' என்றால் அறிவு. தியானம் என்றால் பயணம். நம் மனதை அறிவை நோக்கிச் செலுத்துதல் தானமாகும். ஞானமே வடிவமாகக் கொண்ட ஆன்ம ஸ்வருபத்தில் மனதை நிலைக்கச் செய்வது தியானமாகும்.

புலன்களை நோக்கி மனிதன் ஒட்டத்தைத் தடுத்து அதை உள்முகமாகச் செலுத்தி அதற்கு ஒளியைத் தந்த ஆன்மாவில் இரண்டறக் கலக்கச் செய்வதே தியானமாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றேயாகத் தூயதாக, சிதறாததாக, வலிமையுடன், தெளிவுடன் இருக்கும் மனநிலைக்கு தியானம் என்று பெயர். இது அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது படியாகும்.

விஞ்ஞானத்தில் தொட முடியாத அடிப்படை பிரச்சனை தியானம் தான். அது வசமானால் உங்கள் ஆளுமை அங்கீகாரம் பெரும். அதனுடைய நறுமணம் எங்கும் எதிலும் பரவும்.

தன்னை அறிவது தியானமா? அல்லது தன்னை அறிவதன் மூலம் தன் ஆன்மாவை அறிவது தியானமா? அல்லது தன் ஆன்மாவை உணர்வதின் மூலம் வெட்ட வெளியில் தன்னை தொடர்புபடுத்திக் கொள்வது தியானமா? அல்லது ஜீவாத்மாவை பரமாத்வாவோடு இணைத்துப் பிறவி என்னும் பெருங்கடலை கடப்பது தியானமா? என்றால் இவை அனைத்தும் தியானம் என்று பொருளாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்லையில் அடங்க மறுக்கும் பாகி� ...

எல்லையில் அடங்க மறுக்கும் பாகிஸ்தான் எச்சரித்த இந்தியா எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை ...

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை ; � ...

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை ; வறண்டு போன செனாப் நதி சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நடவடிக்கை காரணமாக ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...