கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல்பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.

அதிமுக – பா.ஜ., கூட்டணி குறித்து இருகட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சு வார்த்தை சென்னை நந்தனம் கிரவுன் பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இபிஎஸ்., பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ்கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் ,  அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இன்றைய பேச்சில் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்: 2019 பொதுத் தேர்தலில் அதிமுகவும்,. பாஜவும் வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. இருகட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: (தமிழில் வணக்கம் என்று கூறிவிட்டு தொடங்கினார்) பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருகட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவுசெய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக.,வுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...