அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல்பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.
அதிமுக – பா.ஜ., கூட்டணி குறித்து இருகட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சு வார்த்தை சென்னை நந்தனம் கிரவுன் பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இபிஎஸ்., பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ்கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் , அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இன்றைய பேச்சில் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்: 2019 பொதுத் தேர்தலில் அதிமுகவும்,. பாஜவும் வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. இருகட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: (தமிழில் வணக்கம் என்று கூறிவிட்டு தொடங்கினார்) பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருகட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவுசெய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக.,வுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.