பெண் எம்பி ரமாதேவி குறித்து ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி எம்பி ஆசம்கானுக்கு எதிராக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
லோக்சபாவில் நேற்று முத்தலாக்தடை மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் சபா நாயகர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமா தேவி அமர்ந்து இருந்தார். அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம்கான் பேசும்போது “நான் உங்களை மிகவும் விரும்புகிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பதுபோல் உணர்கிறேன்,” என்று கூறி ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆசம்கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.
அப்போது ரமா தேவி ஆசம் கானை நோக்கி கோபமாக இப்படியெல்லாம் பேசக்கூடாது. இந்த கருத்தை உடனே நீக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த கான், உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு சகோதரியை போன்றவர் என்றார்.
எனினும் சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று இருக்கைக்கு வந்து அமர்ந்தபின்னர், ஆசம்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் ஆசம்கான் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |