அவதூறாக வழக்கு ஆசம்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள்குறித்து அவதூறாக பேசியவழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 பொதுத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக ஆசம்கான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், இருதரப்புக்கு இடையே மோதலை உண்டு பண்ணும் நோக்கில் ஆசம்கான் பேசியது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எனவே, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார். எனினும், இந்த வழக்கில் ஆசம் கான் ஜாமீன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசம் கானின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்கவாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசம்கான் தெரிவித்துள்ளார். தான் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அடுத்ததலைவராக ஆசம் கான் பார்க்கப்படுகிறார். ராம்பூர் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களிலும் ஆசம் கான் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அவர் மீது நில அபகரிப்பு, ஊழல் என 87 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றில் 27 மாதங்கள் சிறையில் இருந்த ஆசம் கானுக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உத்தரப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட் மாநில அரசுகள், வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசுபவர்கள்மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிக்கும் நிலைவரை அமைதி காக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஆசம் கானுக்கு எதிரான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...