நாடு சரியானபாதையில் செல்வதாகவும், வேலையின்மை தான் மிகவும் கவலையளிப்பதாக இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் பெரும் பாலானோர் தெரிவித்துள்ளனர்.
சந்தை ஆய்வு நிறுவனமான, ‘இப்சாஸ்’ சமீபத்தில் எடுத்த ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நகர்ப்புற இந்தியர்களை பொறுத்த வரை, கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள், வேலையின்மை பிரச்னைதான், கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 69 சதவீதத்தினர், நாடு சரியானபாதையில் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
நிதி மற்றும் அரசியல்சார்ந்த ஊழல்கள், குற்றம் மற்றும் வன்முறைகள், வறுமை, சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் ஆகியவையும், இந்தியர்களை அதிகம் கவலையடைய செய்துள்ளது. உலக நாடுகளைச்சேர்ந்த, 61 சதவீதம் பேர், அவரவர் நாடு சரியான பாதையில் செல்வதாக கூறியிருக்கும் நிலையில், இந்தியாவில்தான், 69 சதவீதம்பேர், சரியான பாதையில் போவதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும், 46 சதவீதம் பேர், வேலையின்மை பிரச்னைகுறித்து கவலை கொள்வதாக தெரிவித்து இருக்கும் நிலையில்,அடுத்தமாதத்தில் இது மேலும், 3 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு, ஒவ்வொரு மாதமும், 28 நாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு, அக்டோபரில் எடுக்கப் பட்டதாகும்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |