நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் போன்ற பகுதி குடல்வால் (APPENDIX) எனப்படுகிறது .
ஆதி மனிதனுக்கு குடல் வால் மிகவும் பயனுள்ள உறுப்பாக இருந்தது, குடல்வால் தாவரங்களில் உள்ள செல்லுலோசை செரிக்க வைக்க பயன்பட்டது, ஆனால் காலபோக்கில்
மனிதனின் உணவு பழக்க வழக்கம் மாற மாற, இது பயனற்ற எச்ச உறுப்பாக மாறி-விட்டது
குடல்வாலில் பாக்டீரியா நோய் கிருமிகளின் தோற்று உண்டாவதாலும், குடல்புழுக்களின் பாதிப்பு காரணமாகவும் , தொடர் மலச்சிக்கல் காரணமாகவும், குடல்வால் சுறுங்குவதாலும் மற்றும் அவ்வப்போது மல-மிளக்கி மாத்திரைகளை சாப்பிடுவதாலும் இந்நோய் உண்டாகிறது.
குடல்வால் நோய் பாதிப்பின்போது திடீரென ஒரு பக்கமாக மட்டும் வயிற்றில் வலி உருவாகும். போக போக வலி கீழ்நோக்கி வலது-பக்கமாக இறங்கும். இப்படி உருவாகிற வலி தாங்க-முடியாத அளவுக்கு இருக்கும். இதனால் பசி எடுக்காது, சாப்பிட்டலும் செரிக்காமல் வாந்தி எடுக்கும்.
இந்த குடல்வால் வலிக்கு தற்காலிகமாக வேண்டுமானால் சில மருந்துகள் நோயின் தீவிரத்தை குறைக்கும். ஆனால் நாளடைவில் நோய் தீவிரமாகும்-போது ஆபரேஷன் மட்டுமே தீர்வாக அமையும்
{qtube vid:=1o8TpVcrTdg}
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.