‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவாதம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘மசோதாக்கள் மீதான விவாதம் தனித்தனியாக நடைபெறும். அவையில் பேச அனைத்து கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்
அமித்ஷா அறிவிப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லோக்சபாவில் நடந்த மின்னணு ஓட்டெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |