‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவாதம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘மசோதாக்கள் மீதான விவாதம் தனித்தனியாக நடைபெறும். அவையில் பேச அனைத்து கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்
அமித்ஷா அறிவிப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லோக்சபாவில் நடந்த மின்னணு ஓட்டெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |