மோடி எனது நண்பர், ஜென்டில் மேன்

“இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குஜராத்தில் சுமார் 70 லட்சம்பேர் திரண்டு வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றபிறகு, டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் முதல்முறையாக இந்தியாவருகிறார். இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் குஜராத், டெல்லியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவரும் அதிபர் டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சக டிவிட்டர் பக்கத்தில் வீடியோபதிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிரம்பை வரவேற்க தாங்கள் பயன் படுத்தும் மொழியை குறிப்பிட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் குஜராத் பயணத்தின்போது அகமதாபாத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கிரிக்கெட்மைதானத்தை பிரதமர் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார். உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது திகழும்

இதன்பின்னர் மைதானத்தில் நடைபெறவுள்ள how are you trump என்ற பொருள் கொண்ட கெம்ச்சோ டிரம்ப் கூட்டத்தில், டிரம்ப் பங்கேற்கிறார். ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை போன்று பல்லாயிரக் கணக்கானோர் மத்தியில் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் உரைநிகழ்த்துவார் என கூறப்படுகிறது.

பின்னர் சபர்மதி நதி முகத்து வாரத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையே பேச்சு வார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து 14 , 239 கோடி ரூபாய் மதிப்பில் நாசாம்ஸ் வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், 18 ,510 கோடி ரூபாய் மதிப்பில் கடற்படை ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திடும் என கூறப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடியை தனது நண்பர் என்றும், சிறந்த நற்பண்புகளை கொண்ட நல்லமனிதர் என்றும் பாராட்டினார். மோடியுடன் வார இறுதியில் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரையிலும் 50 லட்சம்பேர் முதல் 70 லட்சம்பேர் வரை வரவேற்பு அளிப்பார்கள் என மோடி கூறியதாகவும் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒப்பந்தம் சரியான முறையில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா நிச்சயம் ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...