அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

 அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் உஷ்ண சம்பந்தப்பட்ட பிணிகளைத் தணிக்கவல்லது.

ஆறாத புண், படை, தேமல் குணமாக
அல்லியின் இதழ்களைக் கொண்டுவந்து சுத்தம் பார்த்து விளக்கெண்ணெயில் வதக்கி, வதிக்கிய இதழ்களை எடுத்துப் புண்களின் மீது வைத்துக் கட்டினால் நாளடைவில் புண் நீங்கி விடும்.

படை, தேமலுக்கும் இதையே பயன்படுத்த குணம் உண்டாகும்.

 

வெள்ளை அல்லி பூ மேகம் ஆண்குறி துவார ரணம், நீரிழிவு, தாகம், உடல்சூடு ஆகியவற்றைப் போக்கும்.

 

செவ்வல்லி சிறுநீர் நன்கு இறங்கும். நீர்ப்பிணி (மூத்திர ரோகங்கள்) மேகப்பிணி (நீரிழிவு) வெப்பத்தால் உண்டாகும் கண்நோய்கள் இரத்த பித்தம், புண் முதலிய பல பிணிகளும் தீரும் மேற்கண்ட பிணிகளுக்குப் பூவைக் கொண்டு வந்து மணப்பாகு செய்தும், கிழங்கைச் சூரணம் செய்தும் தக்க அளவில் கொடுக்கலாம்.

கொடியும், கிழங்கும் வெப்பம் தணிக்கும், தைலங்களில் சேர்க்கலாம். இலையைக் கிலாழமிட்டும் புண்களை கழுவலாம். கிழங்கை கிராம மக்கள் அவித்து உணவாகவே உண்கிறார்கள். இதன் கிழங்கை உட்கொள்வதால் மேக அனல், உள் ரணம், தாகம் ஆகிய வெப்ப ரோகங்கள் தணியும். இதன் பூச்சாற்றாலும் கிழங்கின் சாற்றாலும் கற்பூர சிலாசத்தைப் பற்பமாக செய்து, மேகப் பிணிகளுக்குக் கொடுக்க, மேக அழல், உட்சூடு, திராதாகம் இரத்த பித்தம் முதலியவை நீங்கும்.

 

 

நீரிழிவு நோய்
இப்பூவிலிருந்து சர்பத் செய்யப்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய், சிறுநீர்க் கோளாறு, உஷ்ணத்தினால் காணும் கண்நோய் இவை அனைத்தும் குணமாக்க வல்லது. முக்கியமாக நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...