அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

 அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் உஷ்ண சம்பந்தப்பட்ட பிணிகளைத் தணிக்கவல்லது.

ஆறாத புண், படை, தேமல் குணமாக
அல்லியின் இதழ்களைக் கொண்டுவந்து சுத்தம் பார்த்து விளக்கெண்ணெயில் வதக்கி, வதிக்கிய இதழ்களை எடுத்துப் புண்களின் மீது வைத்துக் கட்டினால் நாளடைவில் புண் நீங்கி விடும்.

படை, தேமலுக்கும் இதையே பயன்படுத்த குணம் உண்டாகும்.

 

வெள்ளை அல்லி பூ மேகம் ஆண்குறி துவார ரணம், நீரிழிவு, தாகம், உடல்சூடு ஆகியவற்றைப் போக்கும்.

 

செவ்வல்லி சிறுநீர் நன்கு இறங்கும். நீர்ப்பிணி (மூத்திர ரோகங்கள்) மேகப்பிணி (நீரிழிவு) வெப்பத்தால் உண்டாகும் கண்நோய்கள் இரத்த பித்தம், புண் முதலிய பல பிணிகளும் தீரும் மேற்கண்ட பிணிகளுக்குப் பூவைக் கொண்டு வந்து மணப்பாகு செய்தும், கிழங்கைச் சூரணம் செய்தும் தக்க அளவில் கொடுக்கலாம்.

கொடியும், கிழங்கும் வெப்பம் தணிக்கும், தைலங்களில் சேர்க்கலாம். இலையைக் கிலாழமிட்டும் புண்களை கழுவலாம். கிழங்கை கிராம மக்கள் அவித்து உணவாகவே உண்கிறார்கள். இதன் கிழங்கை உட்கொள்வதால் மேக அனல், உள் ரணம், தாகம் ஆகிய வெப்ப ரோகங்கள் தணியும். இதன் பூச்சாற்றாலும் கிழங்கின் சாற்றாலும் கற்பூர சிலாசத்தைப் பற்பமாக செய்து, மேகப் பிணிகளுக்குக் கொடுக்க, மேக அழல், உட்சூடு, திராதாகம் இரத்த பித்தம் முதலியவை நீங்கும்.

 

 

நீரிழிவு நோய்
இப்பூவிலிருந்து சர்பத் செய்யப்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய், சிறுநீர்க் கோளாறு, உஷ்ணத்தினால் காணும் கண்நோய் இவை அனைத்தும் குணமாக்க வல்லது. முக்கியமாக நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...