22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்

காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த 22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.

“எங்கள் 22 எம்.எல்.ஏக்கள் இன்று கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவின் ஆசீர்வாதத்துடன் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகிடைக்கும். அவர் எங்களை ஊக்குவித்து அனைவரின் மரியாதையும் பேணப்படும் என்று உறுதியளித்தார்.” என்று சிந்தியா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆறு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட மத்தியபிரதேசத முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜக தலைவர் ஜே .பி.நட்டாவின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சித்தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இந்தஇணைப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சனிக்கிழமை, மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதி, காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் ஆறு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அனைத்து கிளர்ச்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

இந்த உறுப்பினர்களில் இமார்டி தேவி, துளசிசிலாவத், பிரதியுமான்சிங் தோமர், மகேந்திர சிங் சிசோடியா, கோவிந்த் சிங் ராஜ்புத் மற்றும் பிரபுரம் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள்.

கமல்நாத் மத்தியபிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பாஜகவின் மூத்த தலைவர் சிவ்ராஜ்சிங் சவுகான், வெள்ளிக்கிழமை தனது கட்சி மாநில அரசை அமைப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ முயற்சி செய்யவில்லை என்று கூறியதுடன், காங்கிரஸை சுயஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்..

தனது இராஜிநாமாவை வழங்கிய பின்னர், கமல்நாத், மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஜனநாயக கொள்கைகளை பலவீனபடுத்துவதில் ஒருபுதிய அத்தியாயத்தை சேர்க்கிறது என்று கூறினார். வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக போபாலில் ஒருசெய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரசின் முக்கிய முகமான ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்ததை அடுத்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...