விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு

தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்துக்கான இண்டிகோவின் விமான சேவையை எளிதாக்கியதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தார். தற்போது இந்தியா முழுவதிலுமிருந்து ஹிமாச்சலத்திற்கு வரும் பயணிகள் டெல்லிக்குச் சென்று பின்னர் மாநிலத்திற்கான இணைப்பு விமானங்களில் ஏற வேண்டும் என்று கூறிய அவர் இந்நிலையை பெரிய விமான நிலையங்களால் மாற்ற முடியும் என்றார். ஒரு பெரிய விமான நிலையம் பயணிகளுக்கு நேரடி தடையற்ற இணைப்பை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் விமான நிலைய உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்திய பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்று கூறிய திரு தாக்கூர், குறுகிய காலத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

தரம்ஷாலா விமான நிலையம் ஐந்து மாவட்டங்களை எளிதாக இணைப்பதுடன், மாநிலத்தின் பாதி மக்கள் தொகைக்கு நேரடியாக பயனளிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த ஒற்றை இண்டிகோ விமானம், மாநிலத்தின் பாதிப் பகுதியையும், பஞ்சாபில் உள்ள சில இடங்களையும் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதில் நீண்ட தூரம் செல்கிறது.

விமானநிலைய கட்டமைப்பு விரிவடைந்து தற்போது 1376 மீட்டர் ஓடுபாதையைக் கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்தார். இடம் கிடைத்தால் ஓடுபாதையை மேலும் நீட்டிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் கடந்த 65 ஆண்டுகளில் சாதிக்காததை, கடந்த 9 ஆண்டுகளில் 148 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் சாதித்துள்ளோம் என்றார். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை 200க்கு மேல் கொண்டு செல்லும் இலக்கை நோக்கி அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். இந்த முயற்சியானது பெரிய மெட்ரோ விமான நிலையங்களுக்கும், கடைசி மைல் இணைப்பை வழங்கும் தொலைதூர விமான நிலையங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் திரு அனுராக் தாக்கூரின் முயற்சிகளை திரு சிந்தியா பாராட்டினார், மேலும் அவரது கடுமையான முயற்சிகள் காரணமாக, தரம்சாலா இன்று பிராந்திய மற்றும் தேசிய கிரிக்கெட்டின் மையமாக உள்ளது. தரம்சாலாவில் உள்ள அற்புதமான ஸ்டேடியத்தை உலகின் மிகச் சிறந்தது என அவர் பாராட்டினார்.

“சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது. மேலும், விமானங்கள் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடியவர்கள் இன்று அதில் பறக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அமைச்சர், மேலும் உடான் திட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை இந்தியாவின் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 1 கோடியே 15 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...