யானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது

கேரளத்தில் தேங்காயில் வெடிவைத்ததால் தான் யானை காயமடைந்தது என்பதும், இரண்டு வாரங்களாக உணவு உண்ணமுடியாமல் அவதிப்பட்டு வந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தொடா்புடைய வில்சன் என்ற ரப்பா்விவசாயியை காவல் துறையினா் கைதுசெய்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் இரண்டுபேரை தேடி வருகின்றனா்.

பொட்டாசியம் நைட்ரேட் வெடி மருந்தை தேங்காயில் நிரப்பி அங்குள்ள ரப்பா் தோட்டத்தின் வேலியில் வில்சனும், அவரது கூட்டாளிகளும் வைத்துள்ளனா். இறைச்சிக்காக காட்டுப் பன்றிகளை வேட்டையாட இதுபோன்று வெடிமருந்து நிரப்பிய தேங்காயை வைப்பதாகவும், தற்செயலாக அங்குவந்த கா்ப்பிணி காட்டுயானை அதனை உண்ணும்போது, வெடித்து விட்டது என்றும் மண்ணாா் காடு வனச் சரகா் ஆஷிக் அலி பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தாா்.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெள்ளியாறு ஆற்றில் கடந்த மே 27-ம் தேதி 15 வயது மதிக்கத்தக்க பெண்யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டது. கருவுற்றிருந்த அந்தயானை, வெடிபொருள் நிரப்பிய தேங்காயை உண்ண முயன்ற போது, வெடிபொருள் வெடித்ததில் வாய்பகுதியில் படுகாய மடைந்தது. பின்னா், வலியுடன் வெள்ளியாறு நதியில் இறங்கிய அந்த யானை, அங்கேயே உயிரிழந்தது. வனத்துறை அதிகாரி ஒருவரின் உணா்ச்சிப்பூா்வமான முகநூல் பதிவின் மூலம், இந்த அதிா்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்குவந்தது.

யானையின் உடலுக்கு மண்ணாா்காடு வனமண்டலத்தின் கீழ் வரும் திருவிழாம்குன்னு வனப்பாதுகாப்பு நிலையத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

யானையின் வாய்பகுதியில் துப்பாக்கி குண்டு அல்லது உலோகப் பொருள் எதுவும் காணப்படவில்லை. அதே நேரம், சக்திவாய்ந்த வெடிபொருள் வெடித்ததால் ஏற்படக் கூடிய அளவிலான, நீண்ட நாள்கள் ஆறாத காயம் அதன் வாய்பகுதியில் காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக கடந்த 2 வாரங்களாக உணவு உண்ண முடியாமலும், தண்ணீா் குடிக்காமலும் அந்தயானை இருந்துள்ளது. பின்னா் ஆற்றில் இறங்கிய யானை, அதிக தண்ணீரை உட்கொண்டு, நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தது. அந்தயானையின் வயிற்றில் குட்டி இருந்ததும் பரிசோதனையில் உறுதி செய்யப் பட்டிருக்கிறது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள வனத்துறை அமைச்சா் கே.ராஜு வெள்ளிக் கிழமை கூறுகையில், யானை கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை காவல் துறையினா் வெள்ளிக் கிழமை கைதுசெய்தனா். இந்தச் சம்பவத்தில் மேலும் சில குற்றவாளிகளுக்குத் தொடா்புள்ளது. அவா்களைத் தேடும்பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்றாா்.

இந்தச் சம்பவத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி, கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா உள்ளிட்ட பலா் அதிா்ச்சி தெரிவித்துள்ளனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.