மனதை ஒருமைப்படுத்துதல்

 தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுவயதிலேயே ஐந்து அல்லது ஆறு வயதுகளிலேயே, மனதை ஒரு பொருளில் ஊன்றிச் செலுத்தும் பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. மனம் அப்போது வளைந்து கொடுக்கும். எளிதில் பழகிவிடும். பழக்கம் பின்னர் வழக்கமாகிவிடும். சிறு வயதைக் கடந்தவர்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். சிறிது சிறிதாகத் தான் வெற்றி பெற முடியும். தியானத்தில் மனதை நிலையாக ஊன்றவும் முடியும்.

மனம் ஈடுபாடு கொண்டு ஒன்றில் முழுமையாக ஒன்றும் போது தான் மனம் ஒருமைப்படும். மனதை ஒருமுகப்படுத்திப் பழகிவிட்டால், விரும்பும் எதனிடத்தும் அதை முழுமையாக ஒன்றும்படி செய்யலாம். முயற்சி, பயிற்சி செய்தால், உயர்ச்சி நிச்சயம்.

போர்க்களத்தில் எதிரியை வீழ்த்துவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் மாவீரன் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முன்னேறிச் செல்வான். இப்படிப்பட்ட ஒருமித்த கவனம் தியானத்தின் மீது செல்ல வேண்டும்.

தனது எண்ணம் சிதறல் இல்லாமல், மனம் ஒரே செயலிலோ, காட்சியிலோ குவிந்து விடுவது சில சமயங்களில் இயற்கையாகவே ஏற்படுவதும் உண்டு. நம்மையரியாமைய்யிலேயே ஒருமுகக் கவனம் ஏற்பட்டு விடும். அவர்கள் மனம் அதில் முழுமையாகக் கலந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.