மனதை ஒருமைப்படுத்துதல்

 தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுவயதிலேயே ஐந்து அல்லது ஆறு வயதுகளிலேயே, மனதை ஒரு பொருளில் ஊன்றிச் செலுத்தும் பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. மனம் அப்போது வளைந்து கொடுக்கும். எளிதில் பழகிவிடும். பழக்கம் பின்னர் வழக்கமாகிவிடும். சிறு வயதைக் கடந்தவர்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். சிறிது சிறிதாகத் தான் வெற்றி பெற முடியும். தியானத்தில் மனதை நிலையாக ஊன்றவும் முடியும்.

மனம் ஈடுபாடு கொண்டு ஒன்றில் முழுமையாக ஒன்றும் போது தான் மனம் ஒருமைப்படும். மனதை ஒருமுகப்படுத்திப் பழகிவிட்டால், விரும்பும் எதனிடத்தும் அதை முழுமையாக ஒன்றும்படி செய்யலாம். முயற்சி, பயிற்சி செய்தால், உயர்ச்சி நிச்சயம்.

போர்க்களத்தில் எதிரியை வீழ்த்துவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் மாவீரன் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முன்னேறிச் செல்வான். இப்படிப்பட்ட ஒருமித்த கவனம் தியானத்தின் மீது செல்ல வேண்டும்.

தனது எண்ணம் சிதறல் இல்லாமல், மனம் ஒரே செயலிலோ, காட்சியிலோ குவிந்து விடுவது சில சமயங்களில் இயற்கையாகவே ஏற்படுவதும் உண்டு. நம்மையரியாமைய்யிலேயே ஒருமுகக் கவனம் ஏற்பட்டு விடும். அவர்கள் மனம் அதில் முழுமையாகக் கலந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...