மனதை ஒருமைப்படுத்துதல்

 தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுவயதிலேயே ஐந்து அல்லது ஆறு வயதுகளிலேயே, மனதை ஒரு பொருளில் ஊன்றிச் செலுத்தும் பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. மனம் அப்போது வளைந்து கொடுக்கும். எளிதில் பழகிவிடும். பழக்கம் பின்னர் வழக்கமாகிவிடும். சிறு வயதைக் கடந்தவர்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். சிறிது சிறிதாகத் தான் வெற்றி பெற முடியும். தியானத்தில் மனதை நிலையாக ஊன்றவும் முடியும்.

மனம் ஈடுபாடு கொண்டு ஒன்றில் முழுமையாக ஒன்றும் போது தான் மனம் ஒருமைப்படும். மனதை ஒருமுகப்படுத்திப் பழகிவிட்டால், விரும்பும் எதனிடத்தும் அதை முழுமையாக ஒன்றும்படி செய்யலாம். முயற்சி, பயிற்சி செய்தால், உயர்ச்சி நிச்சயம்.

போர்க்களத்தில் எதிரியை வீழ்த்துவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் மாவீரன் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முன்னேறிச் செல்வான். இப்படிப்பட்ட ஒருமித்த கவனம் தியானத்தின் மீது செல்ல வேண்டும்.

தனது எண்ணம் சிதறல் இல்லாமல், மனம் ஒரே செயலிலோ, காட்சியிலோ குவிந்து விடுவது சில சமயங்களில் இயற்கையாகவே ஏற்படுவதும் உண்டு. நம்மையரியாமைய்யிலேயே ஒருமுகக் கவனம் ஏற்பட்டு விடும். அவர்கள் மனம் அதில் முழுமையாகக் கலந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...