சீன ஆதரவு பிரச்சாரம் கைது

காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்திபரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக்கில் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லிபோலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: “ஷாங்காயை மையமாகக் கொண்ட நிறுவனத்தை நடத்தி வரும் நெவில்லி ராய் சிங்கம் என்ற தொழிலதிபரும், அவரது நிறுவன பணியாளர்களும், பிரபுர் புர்கயஸ்தாவும் இமெயில்கள் மூலம் தொடர்பில்உள்ளனர்.

காஷ்மீரும் அருணாச்சல பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதிகள் அல்ல; அவை சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தியை உருவாக்கி பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல் பட்டிருப்பது அந்த மெயில்கள் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இத்தகைய செய்தியை பரப்புவது குறித்து அவர்கள் சதிதிட்டம் தீட்டி இருக்கிறார்கள். இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான திட்டமிட்ட சதிசெயல்.

நியூஸ் கிளிக்கின் பங்குதாரரான கௌதம் நவ்லகா, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளை தீவிரமாக ஆதரிப்பது, பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜென்டான குலாம் நபி ஃபாயுடன் சேர்ந்து தேச விரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், புர்கயஸ்தாவும், அவரதுகூட்டாளிகளும் வெளிநாட்டு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் இந்தியாவின் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியா வசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை சீர்குலைக்கவும், சட்டவிரோத வெளிநாட்டு நிதி மூலம் விவசாயிகளின் போராட்டத்தை நீட்டிக்கச்செய்து அதன் மூலம் பொதுசொத்துகளை சேதப்படுத்த சதிசெய்துள்ளனர். கோவிட் 19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை இழிவு படுத்துவதற்காகவும் இவர்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் செயல் முறையை நாசப்படுத்த, ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மைக்கான மக்கள் கூட்டணியுடன் சேர்ந்து புர்கயஸ்தா சதி செய்துள்ளார். சட்ட விரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக வேண்டு மென்றே தவறான செய்திகளை பரப்புவதற்கு புர்கயஸ்தா தனது இணைய தளத்தைப் பயன்படுத்தி உள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள், வெளிநாட்டு நிதி என்ற போர்வையில், 115 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம்பெற்றுள்ளனர்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி இருவரையும் 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி டெல்லி காவல் துறை மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...