சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதனங்கள் இறக்குமதிக்கு தடை

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவிவரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதி செய்யப் படாது என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்கே.சிங் கூறினாா்.

இது தொடா்பாக மாநில மின்துறை அமைச்சா்களுடன் வெள்ளிக் கிழமை காணொலி வழியில் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதன இறக்குமதிக்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, மாநிலமின் விநியோக நிறுவனங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை அளிக்க வேண்டாம்.

சீனாவிலிருந்து மட்டும் ரூ. 21,000 கோடி மதிப்பிலான மின் சாதனங்கள் உள்பட மொத்தம் ரூ. 71,000 கோடி மதிப்பிலான மின்சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. நமது நாட்டின் எல்லையில் அத்துமீறலில் ஈடுபடும் ஒருநாட்டிடமிருந்து இந்த அளவு மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து நாம் இனி எதையுமே வாங்கக்கூடாது.

நமக்குத் தேவையான பொருள்களை நாம் உள்நாட்டிலேயே உற்பத்திசெய்யலாம். மின் கோபுரங்கள், மின்தொடா்பு சாதனங்கள், மின் மாற்றிகள், மின்மீட்டா் பாகங்கள் என பல்வேறு மின் சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன. இந்த உபகரணங்களை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு மாநில மின்பகிா்மான நிறுவனங்கள் இனி உத்தரவுகளை கொடுக்க வேண்டாம். மத்திய அரசின் சுய சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் தேவையான மின் சாதனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். சீனாவிலிருந்து இறக்குமதிசெய்ய அனுமதிக்கப் படமாட்டாது. இது தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்குமதிக்கான தடை நடைமுறை படுத்தப்படும்.

மாநில மின்வாரியங்களின கடன்களை சீரமைப்பதற்காகவும், இழப்பை குறைப்பதற்காகவும் உதய், டிடியுஜிஜேஒய், ஐபிடிஎஸ் போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதியதிட்டங்களின் கீழ், மத்திய அரசு எந்தவித நிதியையும் கடனாகவோ அல்லது மானியமாகவோ மின்நிறுவனங்களுக்கு வழங்காது. மாறாக, இந்த திட்டங்களின் மூலம் மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைப்பதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்கவேண்டும். மேலும், சிறப்பு தொகுப்பு திட்டத்தின்கீழ் மாநிலங்கள் ரூ. 93,000 கோடி கடன்களை கேட்டுள்ளன. இதுவரை ரூ. 20,000 கோடி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.