வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் கொண்டு கபம் சம்பந்தமான நோய்களுக்கு – குறிப்பாக ஆஷ்துமாவைக் குணப்படுத்த மருந்தைத் தேடி அலைய வேண்டாம். 'இளைப்பு இருமல்' என்று கூறப்படும் ஆஸ்துமாவை அடியோடு வேரறுக்க முசுமுசுக்கை, ஆடாதோடை போன்றவை நல்ல மருந்தாகும்.
இந்த இலைகளைப் பறித்து வந்து, இதனுடன் புதினா இலை, உளுந்து, கறிவேப்பிலை, இஞ்சி இவை சேர்த்து அரைத்த துவையலை வாரத்திற்கு மூன்று தினங்கள் முதல் சோற்றில் இட்டுச் சிறிது நல்லெண்ணையும் விட்டுச் சாப்பிட்டு வந்தால் கபத் தொல்லைகளை குறிப்பாக ஆஸ்துமாவை வேரறுக்கலாம்.
பெரும் சுவாசக் குழல், மற்றும் கிளை சுவாசக் குழல்கள், சுவாசப் பையின் நுண்ணறைகள் இங்கெல்லாம் ஏற்படுகின்ற அழற்சியைப் போக்க முசுமுசுக்கை பெரிதும் உதுவுகிறது. மேலும், சுவாசப்பைகளில் தேங்கிடும் கோழையை அகற்றித் துப்புரவு செய்வதில் இதற்கு இணை வேறு இல்லை எனலாம். நுரையீரல்களில் உண்டாகும் எந்த நோயையும் இது குணப்படுத்த வல்லதாகும்.
முசுமுசுக்கை வேர் ஏறக்குறைய 100 கிராம், ஆடாதோடை வேர் 50 கிராம், திப்பிலி 25 கிராம், மிளகு 20 கிராம் என்ற அளவில் எடுத்துக் காய வைத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு ஒவ்வொரு வேளைக்கும் இட்டுக் கொதிக்க வைத்துக் காலையிலும் மாலையிலும் குடித்து வர நாள்பட்ட சளியைக் கரைக்கலாம். காசநோயையும் குணப்படுத்தலாம்.
முசுமுசுக்கை தைலம் கண் எரிச்சல், உடற்சூடு இவைகளைத் தணிப்பதாகும். முசுமுசுக்கை இலைகளைக் கொண்டு வந்து இடித்து சாறெடுத்து அதே அளவு நல்லெண்ணையும், அதே அளவு பசும்பாலும் சேர்த்துக் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை அனைவரும் தேய்த்துப் பலன் பெறலாம்.
You must be logged in to post a comment.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
2bulwark