முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

 வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் கொண்டு கபம் சம்பந்தமான நோய்களுக்கு – குறிப்பாக ஆஷ்துமாவைக் குணப்படுத்த மருந்தைத் தேடி அலைய வேண்டாம். 'இளைப்பு இருமல்' என்று கூறப்படும் ஆஸ்துமாவை அடியோடு வேரறுக்க முசுமுசுக்கை, ஆடாதோடை போன்றவை நல்ல மருந்தாகும்.

இந்த இலைகளைப் பறித்து வந்து, இதனுடன் புதினா இலை, உளுந்து, கறிவேப்பிலை, இஞ்சி இவை சேர்த்து அரைத்த துவையலை வாரத்திற்கு மூன்று தினங்கள் முதல் சோற்றில் இட்டுச் சிறிது நல்லெண்ணையும் விட்டுச் சாப்பிட்டு வந்தால் கபத் தொல்லைகளை குறிப்பாக ஆஸ்துமாவை வேரறுக்கலாம்.

பெரும் சுவாசக் குழல், மற்றும் கிளை சுவாசக் குழல்கள், சுவாசப் பையின் நுண்ணறைகள் இங்கெல்லாம் ஏற்படுகின்ற அழற்சியைப் போக்க முசுமுசுக்கை பெரிதும் உதுவுகிறது. மேலும், சுவாசப்பைகளில் தேங்கிடும் கோழையை அகற்றித் துப்புரவு செய்வதில் இதற்கு இணை வேறு இல்லை எனலாம். நுரையீரல்களில் உண்டாகும் எந்த நோயையும் இது குணப்படுத்த வல்லதாகும்.

முசுமுசுக்கை வேர் ஏறக்குறைய 100 கிராம், ஆடாதோடை வேர் 50 கிராம், திப்பிலி 25 கிராம், மிளகு 20 கிராம் என்ற அளவில் எடுத்துக் காய வைத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு ஒவ்வொரு வேளைக்கும் இட்டுக் கொதிக்க வைத்துக் காலையிலும் மாலையிலும் குடித்து வர நாள்பட்ட சளியைக் கரைக்கலாம். காசநோயையும் குணப்படுத்தலாம்.

முசுமுசுக்கை தைலம் கண் எரிச்சல், உடற்சூடு இவைகளைத் தணிப்பதாகும். முசுமுசுக்கை இலைகளைக் கொண்டு வந்து இடித்து சாறெடுத்து அதே அளவு நல்லெண்ணையும், அதே அளவு பசும்பாலும் சேர்த்துக் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை அனைவரும் தேய்த்துப் பலன் பெறலாம்.

One response to “முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...