(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்

பாகிஸ்தான் நள்ளிரவு நடத்திய ஆளில்லா ஏவுகணை தாக்குதலை முறியடித்தது, இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ‘எஸ்.400’ சுதர்சன சக்கரம்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க, கடவுள் மஹா விஷ்ணு கையில் சுதர்சன சக்கரம், எப்போதும் இருக்கும். மஹாபாரதத்தில் மஹாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரும் தேவைப்படும்போது, சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்துள்ளார். அதேபோல், நமது பாரத நாட்டின் பாதுகாப்புக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது எஸ்.400 எனும், ஏவுகணை எதிர்ப்பு சாதனம்.

நேற்று முன்தினம் அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒன்பது இலக்குகளை, ‘ஆபரேஷன் சிந்துார்’ நடவடிக்கை வாயிலாக, இந்தியா தரைமட்டமாக்கியது. 100 பயங்கரவாதிகள் வரை அழிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முயன்றது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள பல ராணுவ இலக்குகளை, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி, பாகிஸ்தான் தாக்க முயன்றது. குறிப்பாக, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லுாதியானா, புஜ் ஆகிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்தது.

ஆனால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, எஸ்.-400 எனும் இந்த பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் ஏவுகணைகளை வானத்தில் இடைமறித்து அழித்தது. இந்த ஏவுகணை எதிர்ப்பு சாதனம், உலகின் மிகவும் அதிநவீன நீண்ட தொலைவு வான்பாதுகாப்பு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்திய விமானப்படையின், கட்டளை (கமாண்ட்) மற்றும் கட்டுப்பாட்டு (கன்ட்ரோல்) வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எஸ். -400 பாதுகாப்பு அமைப்பும், தலா இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஆறு லாஞ்சர்கள், மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கொண்டுள்ளன. ஒரு பேட்டரியால், 128 ஏவுகணைகள் வரை இயக்க முடியும்.

நமது நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து ஐந்து, எஸ். 400 வான்பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்துள்ளோம். இதில், மூன்று தற்போது செயல்பாட்டில் உள்ளன. இன்னும் இரண்டு ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள், அடுத்த ஆண்டு, நமது ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வரும். ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த பெரும் ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்துவதில், எஸ்.400க்கு பெரும் பங்கு உண்டு.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...