(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்

பாகிஸ்தான் நள்ளிரவு நடத்திய ஆளில்லா ஏவுகணை தாக்குதலை முறியடித்தது, இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ‘எஸ்.400’ சுதர்சன சக்கரம்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க, கடவுள் மஹா விஷ்ணு கையில் சுதர்சன சக்கரம், எப்போதும் இருக்கும். மஹாபாரதத்தில் மஹாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரும் தேவைப்படும்போது, சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்துள்ளார். அதேபோல், நமது பாரத நாட்டின் பாதுகாப்புக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது எஸ்.400 எனும், ஏவுகணை எதிர்ப்பு சாதனம்.

நேற்று முன்தினம் அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒன்பது இலக்குகளை, ‘ஆபரேஷன் சிந்துார்’ நடவடிக்கை வாயிலாக, இந்தியா தரைமட்டமாக்கியது. 100 பயங்கரவாதிகள் வரை அழிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முயன்றது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள பல ராணுவ இலக்குகளை, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி, பாகிஸ்தான் தாக்க முயன்றது. குறிப்பாக, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லுாதியானா, புஜ் ஆகிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்தது.

ஆனால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, எஸ்.-400 எனும் இந்த பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் ஏவுகணைகளை வானத்தில் இடைமறித்து அழித்தது. இந்த ஏவுகணை எதிர்ப்பு சாதனம், உலகின் மிகவும் அதிநவீன நீண்ட தொலைவு வான்பாதுகாப்பு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்திய விமானப்படையின், கட்டளை (கமாண்ட்) மற்றும் கட்டுப்பாட்டு (கன்ட்ரோல்) வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எஸ். -400 பாதுகாப்பு அமைப்பும், தலா இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஆறு லாஞ்சர்கள், மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கொண்டுள்ளன. ஒரு பேட்டரியால், 128 ஏவுகணைகள் வரை இயக்க முடியும்.

நமது நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து ஐந்து, எஸ். 400 வான்பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்துள்ளோம். இதில், மூன்று தற்போது செயல்பாட்டில் உள்ளன. இன்னும் இரண்டு ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள், அடுத்த ஆண்டு, நமது ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வரும். ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த பெரும் ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்துவதில், எஸ்.400க்கு பெரும் பங்கு உண்டு.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...