திக்விஜய்சிங், கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் துரோகிகள்

கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய இருவரும் மத்திய பிரதேசத்தின் மிக பெரிய துரோகிகள் என ம.பி. இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நிரூபித்துள்ளனர் என ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில், பாஜக மட்டுமே 18 இடங்களை வென்றுள்ளது.இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

”இந்தவெற்றிக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் உயர்ந்த தலைமை, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முக்கியக் காரணம்.

அடுத்ததாக, ம.பி.யின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மாநிலத் தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்ட பாஜகவின் மாநிலத் தலைவர்கள் பாராட்டுக்குரியர்கள். மேலும், இந்தமுடிவைச் சாத்தியமாக்க அனைவரும் ஒரே அணியாக நின்று பணியாற்றினர். அதேபோல தங்களது சொந்தத்தேர்தல் போலவே நிறைவாகவும் முழுமையாகவும் பணியாற்றிய ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இந்தவெற்றி செல்லவேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்து வெற்றியடைய வைத்ததற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு எனது நன்றி.அனைவரும் ஒரேசிந்தனையுடன் ஒன்றிணைந்து செயல்படும் பாஜக போன்ற கட்சியில் பணியாற்றுவது எனது பாக்கியம் மற்றும் மரியாதை என நான் கருதுகிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) ஹேக்செய்து சேதப்படுத்தலாம் என்ற முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் பேசியிருக்கிறார். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் வேறு என்ன செய்யமுடியும். மக்கள் தீர்ப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மக்கள் உங்களை தொடர்ந்து ஒதுக்கிவைப்பார்கள், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டியபாடம் இதுதான்.

இந்த உறுதியான வெற்றியைப் பற்றி கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோரிடம் நான் சொல்ல விரும்புவது எதுவுமில்லை. ஏனெனில் இந்தத்தீர்ப்பின் மூலம் மத்தியப் பிரதேச மக்கள் அவர்களிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்திற்கு யாரேனும் துரோகிகள் இருந்தால், அவர்கள் திக்விஜய்சிங் கமல்நாத் ஆகிய இருவரும்தான் என மத்தியப்பிரதேச மக்கள் கருதுகின்றனர், இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பில் இதுமிகவும் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது வெளியே வாருங்கள் என மக்கள் அவர்களுக்குத் தெரிவித்துவிட்டனர்”என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...