திக்விஜய்சிங், கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் துரோகிகள்

கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய இருவரும் மத்திய பிரதேசத்தின் மிக பெரிய துரோகிகள் என ம.பி. இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நிரூபித்துள்ளனர் என ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில், பாஜக மட்டுமே 18 இடங்களை வென்றுள்ளது.இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

”இந்தவெற்றிக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் உயர்ந்த தலைமை, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முக்கியக் காரணம்.

அடுத்ததாக, ம.பி.யின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மாநிலத் தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்ட பாஜகவின் மாநிலத் தலைவர்கள் பாராட்டுக்குரியர்கள். மேலும், இந்தமுடிவைச் சாத்தியமாக்க அனைவரும் ஒரே அணியாக நின்று பணியாற்றினர். அதேபோல தங்களது சொந்தத்தேர்தல் போலவே நிறைவாகவும் முழுமையாகவும் பணியாற்றிய ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இந்தவெற்றி செல்லவேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்து வெற்றியடைய வைத்ததற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு எனது நன்றி.அனைவரும் ஒரேசிந்தனையுடன் ஒன்றிணைந்து செயல்படும் பாஜக போன்ற கட்சியில் பணியாற்றுவது எனது பாக்கியம் மற்றும் மரியாதை என நான் கருதுகிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) ஹேக்செய்து சேதப்படுத்தலாம் என்ற முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் பேசியிருக்கிறார். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் வேறு என்ன செய்யமுடியும். மக்கள் தீர்ப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மக்கள் உங்களை தொடர்ந்து ஒதுக்கிவைப்பார்கள், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டியபாடம் இதுதான்.

இந்த உறுதியான வெற்றியைப் பற்றி கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோரிடம் நான் சொல்ல விரும்புவது எதுவுமில்லை. ஏனெனில் இந்தத்தீர்ப்பின் மூலம் மத்தியப் பிரதேச மக்கள் அவர்களிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்திற்கு யாரேனும் துரோகிகள் இருந்தால், அவர்கள் திக்விஜய்சிங் கமல்நாத் ஆகிய இருவரும்தான் என மத்தியப்பிரதேச மக்கள் கருதுகின்றனர், இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பில் இதுமிகவும் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது வெளியே வாருங்கள் என மக்கள் அவர்களுக்குத் தெரிவித்துவிட்டனர்”என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...