ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைதுவங்கியதை நேரில் ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‛இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை’ என தெரிவித்தார்.

இந்தியாவில் சோதனை செய்யபட்ட, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடுமுழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம்முழுதும், 190 இடங்களில், இன்று (ஜன.,08) ஒத்திகை நடைபெறுகிறது. ஒத்திகையை, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நேரில் ஆய்வுசெய்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகையை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். பின் பேசிய அவர், குறுகியகாலத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. போலியோவை விரட்டியதுபோல, கெரோனாவையும் நாட்டைவிட்டு விரட்டுவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனா தடுப்புபணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா பரவதுவங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்புபணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில்தான் இறப்புவிகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

குறுகியகாலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. அடுத்த சிலநாட்களில், இந்த தடுப்பூசிகளை நம்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 2ம் தேதி, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 மாவட்டங்களில் ஒத்திகை செய்யப் பட்டது. தற்போது, நாடுமுழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சென்னை, மத்திய மருந்துகிடங்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் ஆய்வுசெய்தார். பின், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது : சென்னையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை 3 இடங்களில் ஆய்வுசெய்தேன். கொரோனா தடுப்பூசிபணிகள் திருப்தியையும் அளிக்கிறது என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...