குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 12) ஆலோசனை மேற்கொண்டார்.குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 49 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அல்-அடான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களில் இந்தியத் தொழிலாளர்களும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மற்றும் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்திவர்தன் சிங், அவசரஆலோசனைக்காக பிரதமர் அழைத்ததாகவும், தீ விபத்து தொடர்பாக விரிவான தகவல்களை கேட்டறிந்ததாவும் கூறினார். மேலும், பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக குவைத் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற்றும் நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார் ரூ.20,000 கோடிக்கும் ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ வ ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோச ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் மோடி அவர்களை நேற்று சந்தித்தார் இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெ ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறு ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுங்கள், ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை நேற்று கோவையில் திமுகவின் முப்பெரும் விழா வெகு விமர்சையாக ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொ ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொடுக்கும் மோடி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரகவளர்ச்சித் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...