தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டப் பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அந்தத்தொகுதியில் வேட்பாளர் பெயர்களும் அண்மையில் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். “தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் பாஜக நடக்கிறது. ரஜினி ஆதரவுதெரிவித்தால் பாஜக வரவேற்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிகுறித்து தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்து பேசிக்கொள்ளலாம். அஞ்சல்துறை தேர்வில் தமிழ்மொழி சேர்க்கபடும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.

தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்க வில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை எப்படி முடிவுசெய்கிறதோ அதன்படியே செயல்படுவோம். அனைத்து கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்கள் பாஜகவில் ஆர்வமுடன் சேர்ந்து வருகிறார்கள். நாட்டை சரியான பாதையில் பாஜக கொண்டுசெல்கிறது. அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டோமா என்ற யூகத்திற்கு பதில்சொல்ல விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் நெருக்கடி கொடுக்க வில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவுசெய்யப்படும்” என எல்.முருகன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...