இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கப் படாத நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதையடுத்து ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரும் பாஜக நிலைப்பாடே தங்கள்நிலைப்பாடு என்கிற ரீதியில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், பாஜக போட்டியிடவேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது என பேசியுள்ளார். ஈரோடு கிழக்குதொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் சகோதரர் சஞ்சய்சம்பத் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில், விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைநிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்புபல்வேறு கட்சிகளின் தலைவரிடம் ஆதரவுகேட்டு வருகிறது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தாங்களும் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். மேலும், பாஜக போட்டியிடவிரும்பினால், நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து கூட்டணி கட்சியினரிடையே அதிமுகவின் இரு தரப்பினரும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். பாஜக தலைமைஅலுவலகத்தில் நேற்று அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரும் சந்தித்து ஆதரவுகோரினர். இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் குஜராத்சென்றுள்ளார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், “ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையவேண்டும் என்பதே எங்கள்எண்ணம். எனினும், இரு அணிகளையும் இணைக்கும்வேலையில் பாஜக ஈடுபடாது. திமுகவிற்கு எதிராக உள்ள அணிகள் ஒன்றாகச்சேர வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணையவேண்டும்”

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார். காலஅவகாசம் உள்ளதால், இருஅணிகளும் ஒன்றாககூட சேரலாம்” எனத் தெரிவித்துள்ளார் கேபி ராமலிங்கம். பாஜக போட்டியிடவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாறும் நிலைப்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக, தாங்கள் போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. ஈபிஎஸ் அணி போட்டியிட தயாராவதால் பாஜக போட்டியிடாது எனக் கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ், பாஜக போட்டியிட்டால் ஆதரவு எனத்தெரிவித்த நிலையில், பாஜகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...