அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலைகட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், ராமர்கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி, கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி துவங்கியது. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர், நாடுமுழுவதும் நன்கொடை வசூல்செய்யும் பணி கடந்த பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி 45 நாட்களாக நடைபெற்றுவந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2,100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில்சென்று நிதி வசூல் செய்துள்ளனர். ஜனாதிபதி முதல் சாலையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்கள் வரையில் பக்தியுடன் நிதிவழங்கி பகவான் ராமர் உடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...