அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் சரயுநதிக்கரையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ராமர் குழந்தை வடிவில்காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்துவைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட அடுத்த நாள் முதலே பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராமபக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகைபுரிந்து வருகின்றனர். காணிக்கையையும் தாராளமாக வாரி வழங்கி வருகின்றனர். அயோத்தியில் பக்தர்களின் வசதிக்காக சமீபத்தில்தான் உத்தரப்பிரதேச அரசு விமான நிலையம் திறந்தது. தொடர்ந்து, டெல்லி, சென்னை, பெங்களூரு என பலநகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.

அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், உணவகங்கள் என பல்வேறு மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு, அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்புரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து இன்று முதல் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது சமூக லைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்புரயில்களை இயக்குகிறது என தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம்செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர் என்றும் அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...