ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத்

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு செய்தார்.

பின்னர் அயோத்தி கோயில் விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,

“எனக்கு முந்தைய மூன்று தலைமுறையினரும் ராமஜென்மபூமி இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தபோதும் எனக்கு அயோத்திக்குச் செல்வதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.

ஆனால் ஒரு அரசின் அமைப்பு அதிகாரவர்க்கத்தால் சூழப்பட்டுள்ளது. அந்த அதிகாரவர்க்கத்தில் உள்ள ஒரு பிரிவினர், நான் ஒரு முதல்வராக அயோத்திக்குச் செல்வது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று கூறினர். அப்போது, தேவைப்பட்டால் சர்ச்சை வரட்டும் என்று நான் கூறினேன்.

நான் அயோத்திக்குச் சென்றால், ராமர் கோயில் பற்றிய பேச்சு இருக்கும் என்று மற்றொரு பிரிவினர் கூறினர்.

நான் அதிகாரத்திற்காக அயோத்திக்கு வந்தேனா என்று அவர்களிடம் கேள்வி கேட்டேன். அப்படி, ராமர் கோயிலுக்கு வருவதால் அதிகாரத்தை இழக்க வேண்டியிருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் முன்பெல்லாம் தலைமை சரியாக இல்லாததால் அயோத்திக்கு அதிகம் வராத மக்கள், இன்று லட்சக்கணக்கில் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...