மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இந்நாளில், காந்தியின் செயல் பாடுகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தசூழலில், ட்விட்டரில் ‘கோட்சே ஜிந்தாபாத்’ (கோட்சே வாழ்க) என்ற ஹாஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. காந்தியின் பிறந்தநாளில், அவரை கொலைசெய்த கோட்சே வாழ்க என ட்ரெண்டாகி வருவதை பலரும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், கோட்சேஆதரவு ட்வீட்களை பாஜக தரப்பு கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் வருண் காந்தி, “இந்தியா எப்போதுமே ஆன்மீகவல்லரசு நாடாக திகழ்ந்துள்ளது. காந்தி கொடுத்ததார்மீக அதிகாரம்தான் இன்றும் நமது மிகப் பெரிய பலமாக இருக்கிறது.
கோட்சே வாழ்க என ட்வீட் போடுபவர்கள் அனைவரும் பொறுப் பில்லாமல் தேசத்தை அவமானப்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். கோட்சேவாழ்க என 64000க்கும் மேற்பட்டோர் ட்விட்டுகளை பதிவிட்டு ட்ரெண்டாக்கியுள்ளனர். இச்செயலுக்கு பல தரப்புகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |