பொள்ளாச்சியில் பொங்கியவர்கள் இப்போது அடங்கி போவது ஏன்?

விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதே போல பல்லடம் அருகே 3வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுக பிரமுகரான கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண்ணை இரண்டு திமுக நிர்வாகிகள், நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அது வீடியோ படம் எடுத்து, பல மாதங்களாக அப்பெண்ணை மிரட்டி செய்த வன்கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது.

வடமாநிலங்களின், ஒரு சில படிப்பறிவில்லாத மக்கள் வாழும், கிராமப் பகுதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டிருப்பது, அதிலும் ஆளும் திமுக கட்சிப் பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடுமையை நினைவு படுத்தும் வகையில் அதே பாணியில் இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அப்போது பொங்கி எழுந்த சமூக சேவகர்களும், ஒரு தலைப்பட்சமான விமர்சனங்களும், இப்போது சத்தமில்லாது அடங்கிப் போவதன் மர்மம் என்ன?.

இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த வெட்கக்கேடான செயலில் முதலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு உள்ளூர் திமுக பிரமுகர்கள் இருவர் என்பதே.

தமிழகத்தில் கௌரவம் கருதி இது போன்ற குற்றச்செயல்கள் பொது வெளிக்கு வராமல் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டும் பெண்களுக்கு எதிரான அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

இந்தக் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தருவது அவசியமே, ஆனால், அதற்கு இணையான அவசியமும் அவசரமுமான பணி, தற்போது திமுக ஆட்சியில், ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். குற்றவாளிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கும்.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள், காவல் துறைக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை செலுத்தும், தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை விடுவிப்பாரா?, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?.

நன்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.