பொள்ளாச்சியில் பொங்கியவர்கள் இப்போது அடங்கி போவது ஏன்?

விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதே போல பல்லடம் அருகே 3வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுக பிரமுகரான கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண்ணை இரண்டு திமுக நிர்வாகிகள், நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அது வீடியோ படம் எடுத்து, பல மாதங்களாக அப்பெண்ணை மிரட்டி செய்த வன்கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது.

வடமாநிலங்களின், ஒரு சில படிப்பறிவில்லாத மக்கள் வாழும், கிராமப் பகுதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டிருப்பது, அதிலும் ஆளும் திமுக கட்சிப் பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடுமையை நினைவு படுத்தும் வகையில் அதே பாணியில் இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அப்போது பொங்கி எழுந்த சமூக சேவகர்களும், ஒரு தலைப்பட்சமான விமர்சனங்களும், இப்போது சத்தமில்லாது அடங்கிப் போவதன் மர்மம் என்ன?.

இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த வெட்கக்கேடான செயலில் முதலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு உள்ளூர் திமுக பிரமுகர்கள் இருவர் என்பதே.

தமிழகத்தில் கௌரவம் கருதி இது போன்ற குற்றச்செயல்கள் பொது வெளிக்கு வராமல் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டும் பெண்களுக்கு எதிரான அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

இந்தக் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தருவது அவசியமே, ஆனால், அதற்கு இணையான அவசியமும் அவசரமுமான பணி, தற்போது திமுக ஆட்சியில், ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். குற்றவாளிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கும்.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள், காவல் துறைக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை செலுத்தும், தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை விடுவிப்பாரா?, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?.

நன்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.